கவிதையில் கூறப்படும் உவமைகளின் இயல்புகளை வைத்துதான் அந்த கவிதையின்
அனுபவத்தை நாம் அடைய முடியும் என்பது நான் சமீபமாக அறிந்து கொண்டது.
உதாரணத்துக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள சங்க கவிதையில் குவளை மலரையும் அதன்
இயல்புகளும் ஓரளவுக்கு தெரிந்தால் தான் அந்த கவிதையை உள்வாங்க முடியும்.
- கேட்டிசின் வாழி தோழி யல்கற்
- பொய்வ லாளன் மெய்யுற மரீஇ
- வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட வேற்றெழுந்
- தமளி தைவந் தனனே குவளை
- வண்டுபடு மலரிற் சாஅய்த்
- தமியேன் மன்ற வளியேன் யானே.
அதனால்
சங்கபாடல்களில் சொல்லப்படும் மலர்கள் தாவரங்கள் ஆகியவற்றை நாம் தெரிந்து
கொள்வது அந்த பாடலை உள்வாங்குவது உதவியாக இருக்கும். 'சங்க இலக்கியத்
தாவரங்கள்' என்ற இந்த புத்தகம் அந்த வகையில் முக்கியமாகிறது.
https://archive.org/details/
இந்த புத்தகத்தை பற்றி நாஞ்சில் நாடன் எழுதிய கட்டுரை.
No comments:
Post a Comment