Monday, June 23, 2014

மனித வளர்ச்சியும், இயற்கையின் அழிவும்

முதலாளித்துவம் முதலாளியின் லாபத்தின் மேல் உள்ள நாட்டத்தால் இயங்கும் பொருளியல் முறை. தொழிலாளித்துவம் அல்லது சோஷயலிசம், முதலாளி லாபத்தை குவித்து தொழிலாளிகளை சுரண்டுகிறார்களே, தொழிலாளிகளுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்க வேண்டும், தொழிலாளி புரட்சியின் மூலம் ஆட்சியை பிடிக்க வேண்டும் ஆகிய லட்சியங்களை கொண்ட கருத்து. இந்த இரு தரப்பும் ஒரு முக்கியமான பொருளை மறந்துவிடுகிறது அல்லது பொருட்படுத்துவதில்லை.

இன்று ஒரு மர கதவு செய்யப்படுகிறது என்றால் அதற்கான மூலதனத்தை முதலாளி போடுகிறான், மரத்தை வாங்கி தருகிறான், அதற்கு வேண்டிய உபகரணங்களயும், தொழிற்சாலையும் அமைத்து தருகிறான். தொழிலாளி மரக்கதவை செய்கிறான். இந்ந மரக்கததவின் விலையானது மூல பொருட்கள் வாங்குவதற்கான செலவு, தொழிலாளி சம்பளம், தொழிற்சாலை செலவுகள், முதலாளி லாபம், வரி ஆகியவற்றின் கூட்டு தொகை. அதுவே மக்கள் கையில் வந்து சேரும் பொழுது, இடை தரகு, போக்குவரத்து என்று இன்னும் விலை ஏற்றப்பட்டு விற்கப்படும். இந்த விலையில், அந்த மரத்தின் விலை என்ன? மூல பொருள் வாங்குவதற்கான விலை. இந்த மூல பொருளின் விலை எப்படி நிர்ணயிக்கப்படும்? மேலே சொன்ன அதே வகையில் தான். மரத்தை வெட்டும் செலவு, போக்குவரத்து, மரம் வெட்ட அனுமதி வாங்கும் செலவு அல்லது தோட்ட பரமாரிப்பு, லாபம் ஆகியவற்றின் கூட்டு தொகையே அந்த மரத்தின் விலை.அப்போது உண்மையாக மரத்திற்கான விலை எவ்வளவு? ஒன்றுமே இல்லை. மீண்டும், மீண்டும் எந்த ஒரு பொருளின் விலையும், மனித உழைப்புக்கும் மனித முதலுக்கும் தான் தரப்படுகிறதே தவிர அந்த மரத்திற்கு அல்ல. வளத்திற்காக என்று அரசாங்கத்துக்கு ஒரு பகுதி போகலாம். ஆனால் அந்த மரத்திற்கு என்று எந்த மதிப்பும் அளிக்கபடுவதில்லை.
அந்த மரத்திற்கு விலை தேவையா? தேவையில்லை, அந்த பணத்தை வைத்து அம்மரம் என்ன செய்ய இயலும். ஆனால் அந்த மரத்தை மண்ணில் சாய்த்ததற்கு என்ன திருப்பி தரப்படுகிறது? உழைப்புக்கு ஊதியம், முதலுக்கு லாபம், வளத்திற்கு ? சரி என்னதான் திருப்பி தர வேண்டும்? அதிக மரம் வளர்கலாமா? வளர்க்கலாம், ஆனால் எத்தனை மரத்தை வாங்கும் வணிகர்கள் அதை செய்கிறார்கள். இல்லை எத்தனை மக்கள் அதை செய்கிறார்கள். சேவை மனப்பான்மை, சுற்று சூழலை மதிப்பவர்கள் சிலரே அதை செய்கிறார்கள். அப்படி மரத்தை நட்டாலும் அது வெட்டப்பட்ட மரத்திற்கு நிகரல்ல. இருந்தும் அந்த சிறு வேலையை கூட எந்த நிறுவனமும் செய்வதில்லை.இந்த வணிகம் எப்படி இருக்கிறது என்றால்,ஒரு குடும்பம் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் போயிருக்கிறது, அதில் சுலபமாய் எட்டி குதித்து அந்த வீட்டில் இருக்கும் பொருட்களை திருடும் கூட்டம் அதை சந்தையில் கொண்டு வந்து பாதி விலையில் விற்பது போல தான் உள்ளது.

இது மரங்களுக்கு மட்டும் இல்லை, இயற்கையில் இருக்கும் எல்லா வளங்களுக்கும் இந்த கேள்வி பொருந்தும். இதனால் என்ன விளைவு என்றால், ஒரு பொருள் விலை குறைவாக கிடைக்கும் என்றால் அதை வீனாக்கப்பட்டால் யாரும் கவலை கொள்வதில்லை. உதாரனம், உணவு பொருட்கள், இன்றைய நிலையில் ஒரு நடுத்தர குடும்பத்திற்கு உணவு பொருட்கள் வாங்க செலவு அவ்வளவாக ஆகி விடாது. அதனால் அந்த உணவு வீணாக்கபட்டால் அது ஒரு பெரிய விஷயமாக தெரியாது. நிறுவனங்களில் வீணாகும் மின்சாரத்தை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள். காகிதங்களை இஷ்டத்திற்கு செலவளிப்பார்கள். பிளாஸ்டிக் காகிதங்களை தூக்கி குப்பையில் வெகு சுலபமாக போடுவார்கள். மதிப்பு என்பது பொருளுக்கு அல்ல, பணத்திற்கு தான். அதற்காக எல்லா பொருளையும் விலை அதிகமாக விற்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஒவ்வொரு வணிக பொருளும் உருவாக்குவதற்கு இயற்கை வளங்கள் எவ்வளவு செலவாகிறது என்ற பிரக்ஞை மனிதர்களுக்கு தேவை.

இயற்கையில் இருந்து எடுக்கும் வளத்திற்க்காக திருப்பி இயற்கைக்கு என்ன செய்கிறோம். பெரும்பாலும் ஒன்றுமில்லை பதிலுக்கு அதே இயற்கையை இன்னும் நாசம் செய்யும் வகையாக ப்ளாஸ்டிக போன்ற பொருட்களை உற்பத்தி செய்கிறோம், உலக தட்ப வெட்ப நிலையை மாற்றும் வகையில் பல விதமான நச்சு வாயுவை உமிழ செய்கிறோம். எதற்கு இப்படி ஒரு வெறி ஆட்டம். இதன் மூலம் என்ன சாதிக்கிறோம். மனிதன் அடிப்படை தேவைகளை மட்டும் பூர்த்தி செய்து கொண்டிருந்தால் இப்படி நடக்குமா? மனிதனுக்கு ஏன் அதிகம் தேவைபடுகிறது? இந்த தேவையின் ஊற்று முகம் எது? தேவை அவனில் நிகழ்கிறதா இல்லை அவன் மேல் திணிக்கப்படுகிறதா?

தொழில்நுட்பம் மக்களின் உடல் உழைப்பை குறைப்பதற்காக கண்டுபிடிப்புகளை நிகழ்த்துகிறது. சைக்கிளிள் 10 மைல் போகும் நேரம் 1 மணி நேரம் என்றால் பைக்கில் அதை அரை மணி நேரத்தில் சென்று சேர்ந்து விடலாம். காரில் அதை விட விரைவாக சொகுசாக போய் சேரலாம். ஆக இந்த தொழில்நுட்ப வளர்ச்சியால் மனிதனுக்கு நேரம் மிச்சமாகிறது. வேலை செய்யும் வேகத்தை தொழில்நுட்பம் அதிகம் செய்திருக்கிறது ஆனால் வேலை செய்யும் நேரம் இன்னும் 8 மணி நேரம் தான். மணிதனுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களும் சேவைகளும் தயாரிக்க தேவையான ஆட்களும் நேரமும் குறைகிறது. இன்று மணிதனின் முக்கியமான தொழிலில் ஒன்றாக விவசாயம் கிடையாது, அது படிக்காதவர்களுக்கான தொழிலாகிவிட்டது. அமெரிக்காவில் கிட்டதட்ட நூறு வருடங்களுக்கு முன் விவசாயத்தில் 80% மக்கள் ஈடுபட்டிருந்தனர், ஆனால் இன்று வெறும் 3% மக்களே விவசாயத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இதில் மக்கள் தொகை பெருக்கமும், அந்த நாட்டுக்கு அன்றாடம் நடக்கும் குடியேற்றத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும். ஆயினும் விவசாயத்தில் குறைந்த சதவிகித மக்களே வேலை செய்கின்றனர் என்றால் மீதமிருப்பவர்கள் என்ன செய்கிறார்கள். அத்தியாவசிய சேவை, அத்தியாவசிய பொருள் உற்பத்தியில் ஒரு கணிசமான சதவிகித மக்கள் வேலை செய்வார்கள். ஆனால் கட்டாயம் 50% சதவிகித மக்கள் அத்தியவசிய தேவைக்கு அதிகமான ஏதோ ஒரு பொருளின் உற்பத்தியிலோ அல்லது சேவையிலோ தான் ஈடுபட்டிருப்பார்கள். இப்படி தேவைக்கு அதிகமான உற்பத்தியில் தான் இயற்கை வளங்கள் தேவையில்லாமல் அழிக்கப்படுகிறது, மாசு படுத்தப்படுகிறது.
அப்போது இயற்கை வளங்களை உபயோகப்படுத்துவது தவறா? தவறில்லை இயற்கையில் இருக்கும் அனைத்துமே உயிரினங்களுமே ஒன்றை ஒன்று சார்ந்திருக்கிறது. ஒன்று அழிந்து ஒன்று வாழ்கிறது. புலி மானை தின்று தான் உயிர் வாழ்கிறது. அது பத்து வருடம் உயிர் வாழும் என்றால் எத்தனை மான் அழிக்கப்படும்? ஆனால் அதன் தேவை அது, அதற்கு ஏற்ப அதை இயற்கையிலிருந்து எடுத்து கொள்ளகிறது. ஆனால் மனிதர்களான நாம் இயற்கையை தேவைக்கு மேலாக நுகர்வுக்காக அழிக்கிறோம். என் எண்ணத்தில் மனிதனுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை உண்டாக்கும் கண்டுபிடிப்புகள் என்றோ நடந்து முடிந்துவிட்டது. இன்று கண்டுபிடித்து கொண்டிருப்பதெல்லாம் தேவையில்லாத, முதலாளிக்கு லாபம் ஈட்டி தரும் விஷயங்கள் தான். அப்போது ஏன் நாம் கண்டுபிடிப்பதை நிறுத்தி கொள்ளக்கூடாது. எதற்காக புதிதான பொருளுக்கான ஆராய்ச்சி. இன்று புதிய பொருட்கள் கண்டு பிடிக்கும் தோறும் அது முதலாளி வர்க்கத்தின் அசுர வளர்ச்சிக்கு உதவுகிறது, அந்த புதிய கண்டுபிடிப்புகளின் வசதிகளால் மக்கள் அதற்கு அடிமையாகி உடல் உழைப்பு இல்லாத பூஞ்சைகளாகி வருகிறார்கள். அந்த புதிய கண்டுபிடிப்புகளின் மூலம் ஏராளமான பக்க விளைவுகள் ஏற்படுகிறது. இத்தனை கெடுதல்கள், இயற்கை வளங்களை விடுங்கள், மக்களுக்கே ஏற்படும் போது ஏன் இதை நாம் இன்னும் தொடர்கிறோம். நிறுத்திவிடலாமல்லாவா? இதுவரை கண்டுபிடிக்கபட்ட உபகரணங்கள், சக்திகள் ஆகியவையை செம்மை படுத்துவதோடு நிறுத்தி கொள்ளலாமல்லவா?

இதில் பிரச்சனை என்னவென்றால், நிறுத்துவது என்றால் யார் நிறுத்துவது? எந்த நாடு இதற்கு முன் வரும். ஒன்றுமில்லை, உலகெங்கும் அதி ஆபத்தானது என்று பொதுவாக ஒத்து கொள்ளப்பட்ட அணு அயுதங்களை எல்லா தேசங்களும் கைவிட்டுவிட்டதா? தேசங்களுக்கு இடையில் போட்டி இருக்கும் தோறும் இந்த 'வளர்ச்சிக்கான' தேடலும் ஓட்டமும் தொடரும். வரலாறு தோறும் நாம் காண்பது, எந்த ஒரு சமுகம், ஆட்சி, நாடு தொழில்நுட்பத்தில் வளர்ச்சி அல்லது உலகின் பொதுபோக்குக்கு தன்னை தயார்படுத்தி கொள்ளவில்லயோ அவையெல்லாம் பின் தங்கி ஒடுக்கப்படுகிறது. காடுகளிலும், மலைகளிலும் வாழும் பழங்குடி மக்கள், நாட்டில் வாழும் மக்களால் தாழ்ந்தவர்களாய் கருதப்படுகிறார்கள், ஒடுக்கப்படுகிறார்கள். தொழில்நுட்ப வளர்ச்சி அடையாத நாடுகள் வளர்ச்சி அடைந்த நாட்டு மக்களால் அடக்கி அழிக்கப்படுகிறார்கள. உதாரணம், அமெரிக்க பழங்குடிகள் ஸ்பானிய மற்றும் பிற காலனிய படைகளால் கிட்டதட்ட முற்றிலுமாக அழித்து ஒழிக்கப்பட்டார்கள். அப்படி இருக்கையில் எந்த நாடு தன் தொழில்நுட்ப நிலையை கைவிட தயாராகும்? அது மட்டுமில்லாம் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி பெருகி வரும் இந்த மக்கள் தொகைக்கு வேலை தர முடிகிறது. அதனால் இந்த வளர்ச்சிகளை நிறுத்தினால் பல்வாறான பின் விளைவுகளிருக்கும்.

இது ஒரு சுழற்சி போலாகி விட்டது. மனிதன் தன்னை பிற மனிதனிடம் இருந்து காப்பாற்றி கொள்ள வளர்ச்சி அடைந்தாக வேண்டும், ஆனால் அவன் வளர்ச்சி அடையும் தோறும் அவன் வாழும் இந்த உலகம் படி படியாக அழிகிறது. ஒரு வீட்டின் அஸ்திவாரத்தை பெயர்த்தெடுத்து மேலும் தளங்கள் கட்ட உபயோகிப்பது போன்றது இந்த வளர்ச்சி. காந்திய பொருளாதார முறை இயற்கையை கணக்கில் கொள்கிறது,அதை வீணடிக்க கூடாது என்று வாதிடுகிறது. ஆனால் அதை யார் நடைமுறைக்கு கொண்டுவருவது? மனிதனுக்குள் போட்டி விலகி மனித நேயம் வளர்ந்தால் மட்டுமே இதற்கு ஒரு தீர்வு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

Friday, June 13, 2014

கவிதை வாசிப்பு

கவிதை வாசிப்பு குறித்த என் கேள்விக்கு எழுத்தாளர் ஜெயமோகனின் பதில். படிமம், கவிதையின் மொழி குறித்த எனது ஐயத்திற்கு விளக்கம் அளித்திருக்கிறார்.

Tuesday, June 3, 2014

நியூ யார்க் பயணக் கட்டுரை - 7

மே 25 மதியம் ஒரு மணி அளவில் அமேரிக்கன் நேச்சுரல் அரங்காட்சியகத்திற்கு சென்றோம். நியு யார்க்கில் அருங்காட்சியகங்கள் தான் அதிகமாக இருக்கிறது. அருங்காட்சியகத்தில் நுழைந்த்துமே, முதலில் வானவியல் சம்பத்தப்பட்ட காட்சி பொருட்கள் தான் இருந்தது. பூமி, அதின் அருகே உள்ள கிரகங்கள் அதை பற்றிய தகவல்கள் என நிறைய இருந்ந்தது.அந்த ஒரு சின்ன பகுதியை முழுமாயாய் பார்ப்பது என்றாலே பல மணி நேரம் தேவைப்படும். அதற்கு மேலிருந்த தளத்தில் உலகின் உருவாக்கம் பற்றியும், அதன் வயது மற்றும் எந்த காலத்தில் என்னன்ன மாற்றங்கள் உருவாயிற்று, உயிர்கள் எப்படி உருவாயிற்று என்பதை விவரிக்கும் ஒரு சுருள் படிக்கட்டு டைம் லைன் இருந்தது.

அதன் பின் வேற்று கிரக்கத்தில் பல டன் எடையுன் பூமியில் விழுந்த மிட்டியோராய்ட் கற்களின் பகுதிகளை வைத்திருந்நார்கள். இரும்பு கற்கள். வேற்று கிரகத்தின் உயிர்கள் வாழ்வதற்கு ஆதாரமாய் கிடைத்த ஃபாசில்கள் வைத்திருந்தார்கள். எரிமலைகளை பற்றி, பூமியை பற்றி என்று பல தகவல்கள். இப்படியே பார்த்தால் இந்த அருங்காட்சியகத்தை பார்த்து முடிக்க ஒரு வாரத்திற்கும் மேல் ஆகும். அதனால் நமக்கு எந்த இடம் பார்க்க ஆசை இருக்கிறதோ அதை பார்த்துவிட்டு கிளம்புவது என்று முடிவுக்கு வந்தோம். அதன் படி விளங்குகள், பறவைகளின் தோலில் பஞ்சிட்டு அடைத்து வைத்திருந்தார்கள், அதன் வழியே பார்த்து கொன்டே நகர்ந்தோம். சமுத்திர உலகம் எனும் இடத்தில் கடலுக்குள் இருக்கும் உயிரினங்களை காட்சிப்படுத்தி இருந்தார்கள். அமெரிக்க தாவரங்களை காட்சிப்படுத்தி இருந்தார்கள். அதில் அமெரிக்காவில் இருக்கும் 2000 வருடங்களுக்கு முன்னிருந்தே இன்றும் உயிருடன் இருக்கும் சிக்காயோ மரத்தின் குறுக்கு வெட்டு தோற்றதின் மாதிரியை வைத்திருந்தார்கள். 20 அடி விட்டம் உள்ள வட்டமாக தோன்றியது.

மனித பரினாம வளர்ச்சியை குறித்து ஒரு பகுதி ஒதுக்க பட்டிருந்தது. ஆதி மனிதனின் எலும்பு கூடுகள். அவன் உடற் கூறு விவரங்கள். அவனின் தொழில் நுட்பம் மற்றும் அவனிடம் எப்படி மொழி வளர்ந்து வந்தது என்பதை காட்சி படுத்தி விவரித்திருந்தார்கள்.ஒரு பகுதியில் ஆசிய மக்களை பற்றிய ஒரு பகுதி இருந்தது. ரஷ்ய, சீன, திபத்திய, இந்திய, ஜாப்பானிய நாட்டு மக்களின் கலச்சாரங்கள், அவர்களின் இசை, மதம், முந்தய தொழில்நுட்பம் என பல பொருட்களை காட்சிப்படுத்தி இருந்தார்கள். மதத்தின் வகையில் இந்தியா ஆசியாவிற்கே பெரிய பங்காற்றி இருக்கிறது. புத்தரும், இந்து தெய்வங்களும் பல நாடுகளில் வழிபட பட்டிருக்கிறது.

இன்று நியூ யார்க் சுற்றுலாவின் கடைசி நாள், அதனால் பார்க்கவிட்டு போன இடங்கள் இன்னும் நிரைய இருந்தது. அதனால் ஒரு இரண்டு மணி நேரம் அந்த அருங்காட்சியகத்தில் செலவிட்டு விட்டு வெளியேறினோம். அதற்கு பின் புறம் நியூ யார்க் ஹிஸ்டார்க்கள் சொசைட்டி இருந்தது. அங்கு சென்றோம். அதில் அமெரிக்க புரட்சி போரில் சம்பத்தபட்ட பல பொருட்கள் வைத்திருந்தார்கள். அமெரிக்க சிவில் வாரின் போது பயன் படுத்தப்பட்ட காட்டன் கில்ட் போர்வைகளை பல வைத்திருந்தார்கள். அந்த போர்வைகளில் தேசப்பக்தி உருவகங்களும், தேச கொடியும் வரையப்படிருந்தது. அது மக்களையும் போரில் இருக்கும் ரானுவ வீர்ர்களையும் இனைக்கும் ஒரு பொருளாக இருந்திருக்கிறது. 

1930களில் நியூ யார்க்கில் எடுக்கப்பட்ட புகைபடங்களை காட்சிக்கு வைத்திருந்தார்கள். மேல் தளத்தில் யாரோ ஒரு ஓவியரின் ஓவியங்களை வைத்திருந்தார்கள். அவர் பறவைகளை மட்டுமே வரைந்திருந்தார். அதற்கு மேல் அங்கு வரலாற்று காட்சியகங்கள் எதுவும் இல்லை. அங்கிருந்நு வெளியேரினோம்.

நியூ யார்க் கடலோரத்தில் பல தீவுகளாக இருப்பதால் அதை நீரில் சுற்றி காட்ட பல படகு சவாரிகள் இருக்கிறது. அதனால் படகு சவாரி போவதாக முடிவு செய்து 42வது வீதியில் இருக்கும் படகு துறைக்கு சென்றோம். அந்த வீதியில் எல்லாம் குடியிருப்பு கட்டிடங்கள் பல்லடுக்கு மாடிகளாய் இருந்தது. படகு துறைக்கு செல்லும் போது 5 மணியாகிவிட்டது. கடைசியில் ஒரே ஒரு அதி வேக படகு சவாரி இருந்தது. அதில் சென்றோம். தன்னிரை கிழித்து கொன்டு சென்றது. 4000 குதிரை வேகம் என்று சொன்னார்கள், ஆனால் அவ்வளவு வேகமாக செல்வதாக தெரியவில்லை. நியூ யார்க் கரை முழுக்க படகு துறைகள் இருந்தது. அரை மணி நேர சவாரி முடிந்து திரும்பினோம்.

அங்கிருந்து சப் வே ரயில் மூலமாக ப்ருக்ளின் பாலத்திற்கு சென்றோம். இதுவும் நியூ யார்க் நகரின் ஒரு அடையாள சின்னம். நான்கு நாட்களாய் நியூ யார்க்கில் சுற்றியும் நியூ யார்க்கின் மன்ஹாட்டன் பகுதியை விட்டு இப்போது தான் வேறு பகுதிக்கு வருகிறோம். ஏனெனில் மன்ஹாட்டன் பகுதியில் சுற்றலா தளங்கள் அதிகம், மற்றும் மன்ஹாட்டன் பகுதி வளர்ந்த அளவிற்கு பிற பகுதிகள் வளரவில்லை என்று தான் நினைக்கிறேன். சப் வே ரயிலில் ப்ரூக்ளின் பாலம் அருகே இறங்கி பாலத்திற்கு நடந்தோம் சூரியன் மறைய துவங்கி இருந்தது. பாலத்தின் மேல் மக்கள் பலர் நடந்து கொன்டிருந்தனர். சைக்கிள்களில் பலர் சென்று கொன்டுருந்தனர். பாலத்தில் இரு தளங்கள், கீழ் தளத்தில் கார்கள் ஓடி கொன்டு இருந்தது, மேல் தளத்தில் பாதசாரிகளும், சைக்கிளும்.

ப்ரூக்ளின் பாலம்
பெரிய பாலம். 1883ல் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. இரண்டு மாபெரும் தூன்களின் மேல் பாலம் செல்கிறது. மன்ஹாட்டனையும், ப்ரூக்ளினையும் இனைக்கிறது. பாலத்தை பல இரும்பு கம்பிகளால் தூன்களில் பினைக்கபட்டிருந்தது. தூன்களில் இருந்து விரியும் விலா எழுப்புகள் போல் இருந்தது அந்த கம்பிகள். பாலத்தின் உள்ளிருந்து பார்க்கும் போது ஏதோ பெரிய வலையில் அடைக்கப்பட்டது போலிருந்தது.  அது கட்டப்பட்ட காலத்திற்கு இது பெரும் சாதனை. இப்படிப்பட்ட செயல்களை செய்து காட்டுவது உலக அளவில் அந்நாட்டின் வல்லமையை பறைசாற்றுகிறது. பாலங்களின் விளிம்பு தடுப்பிகள் இரும்புகளால் ஆனது. அதில் சுற்றுலா வருபவர்கள் அவர்கள் பெயரை எழுதி வைத்துவிட்டு சென்றுருந்தார்கள். பாலத்தில் சில இடங்களில் பூட்டை பூட்டி, அந்த பூட்டில் அவர்களின் பெயர்களை எழுதி இருந்தார்கள். ஜோடிகளின் பெயர்களாக தானு இருந்தது. அதற்கு பெயர் காதல் பூட்டு - love lock. நாங்கள் பூட்டு எடுத்து செல்லவில்லை. ப்ருக்ளினில் இருந்து மன்ஹாட்டன் நோக்கி நடக்கும் போது, மன் ஹாட்டன் நகரின் கட்டட வரிசைகள் அழகாக தெரிந்தது. பாலத்தின் கீழு படகுகள் சென்று கொன்டிருந்தது. அனைவரும் புகைபடங்கள் எடுத்து கொன்டனர். விபரிதமாக ஒரு வெள்ளை இளைஞன் பாலத்தின் விளிம்புகளில் ஏறி புகைபடம் எடுத்த கொன்டிருந்தான். பாலத்தை நடந்தே கடந்து மன்ஹாட்டன் வந்தோம். பார்க்க இருந்த கடைசி இடம் எம்பயர் ஸ்டேட் கட்டிடம். அங்கு சென்றோம்.


காதல் பூட்டு

இரவு 9;30 ஆகி இருந்தது. ரயிலில் இருந்து இறங்கி உணவகம் தேடி நடந்து சென்றோம். இரவு நேரங்களில் நியூ யார்க்கின் வீதிகள் குப்பை பைகளாள் நிரம்பி இருக்கிறது. ஒவ்வொரு கடையும் மூடும் நேரத்தில் குப்பைகளை எடுத்து வீதியில் வைத்து கடையை சுத்தம் செய்கிறார்கள். வீதிகளில் நீர் வழிந்தோட குப்பைகளுடன் இருந்ந்து. எம்பயர் ஸ்டேட் அருகே ஒரு உணவகத்தில் சாப்பிட்டோம். எம்பயர் ஸ்டேட்டை சுற்றி இருக்கும் வீதிகள் சுத்தமாக இருந்தது. சாப்பிட்டு வெளிவந்தால் பெரிய வரிசை நின்று கொன்டிருந்தது. மேல சென்று பார்க்க இரண்டு மணி நேரமாகும் என்றார்கள். அதை தவிர்க்க விரைவு டிக்கட்டுகளும் விற்று கொன்டிருந்தனர்.

எம்பயர் ஸ்டேட் பில்டிங் 103 தளங்களுடன் அமேரிக்காவின் நான்காவது உயரமான கட்டிடம், உலக அளவில் 23 வது உயரமான கட்டிடம். 1931ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த கட்டிடம் கட்டப்பட்ட வருடத்தில் இருந்து 40 ஆண்டுகள் உலகின் உயரமான கட்டிடமாக இருந்திருக்கிறது. நியூ யார்க்கின் உயரமான கட்டிடங்களுக்கு அமெரிக்காவின் வரலாற்றில் ஒரு முக்கிய இடம் இருக்கிறது 19ம் நூற்றான்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றான்டின் தொடக்கத்திலும் அமேரிக்காவின் அசாதாரன வளர்ச்சியை இந்த கட்டிடங்கள் குறிக்கிறது. அந்த காலங்களில் இந்த கட்டிடங்களின் தலை சுற்ற வைக்கும் உயரத்தில் தொழிலாளிகள் (Iron workers) எப்படி அநாயாசமாக வேலை செய்தார்கள் என்பது ஆச்சரியத்துக்குரியது.
இரும்பு தொழிலாளிகள்

திருப்பதி தேவஸ்தான வரிசை போல் வளைந்து வளைந்து சென்றது வரிசை. கட்டிடத்தின் உயரமான தளத்திற்கு கூட்டி சென்று அங்கிருந்து நகரத்தை பார்கலாம். அவ்வளவு தான் விஷயம். நேற்றும் இங்கு வந்தோம் ஆனால் மேகத்தினால் காட்சி சுத்தமாக தெரியாது எள்றார்கள். இன்று தெளிவான வானம், இரவு வார இறுதி அதனால் தான் பெரும் கூட்டம். வரிசையில் கால் கடுக்க இரண்டு மணி நேரம் நின்றோம். எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தில் மின் சக்தியை சேமிக்க எவ்வளவு ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள் என்று எழுதிப்போட்டிருந்தார்கள். கட்டிடம் கட்டப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைபடங்கை வைத்திருந்தார்கள். இந்த கட்டிடத்தின் ஒவுவொரு தளமுமு உயரமாகவே இருந்தது. இப்போது கட்டப்படும் பல்லடுக்கு கட்டிடங்களில் தளங்களின் உயரத்தை குறைத்த கட்டுகிறார்கள் போலும்.

87வது மாடியில் இருந்து நகரத்தை பார்த்தோம். நான்கு திசைகளில் இருந்து பார்த்தோம். விமானத்தில் இருந்து பார்ப்பது போல் இருந்தது. நகரத்தின் மேல் மின் மினிகள் போர்வையாக போர்த்த பட்டிருந்தது போல் இருந்தது. நிறைய கட்டிடங்களில் தேவை இல்லாமல் விளக்கு எரிந்து கொன்டிருக்கிறது என்று தோன்றியது.  பல கட்டிடங்களின் சிகரங்களில் சிவப்பு விளக்கும் அதன மேல் நீல விளக்கும் எரிந்யு கொன்டிருந்தது. அமெரிக்க கொடியின் நிறத்தை குறிக்கிறது என்று நினைக்கிறேன். மன் ஹாட்டனை தவிர நியூ யார்க்கின் மற்ற பகுதிகளில் உயர்ந்த கட்டிடங்கள் மிக குறைவாகவே தென்ப்பட்டது.

நியூ யார்க்கில் இன்னும் ரிக் ஷாக்கள் ஓட்டுகிறார்கள். எம்பயர் ஸ்டேட்டில் இருந்த வெளிவந்ததும். ரிக்ஷா நின்றது அதில் ஏரி டைம் ஸ்க்யர் சென்றோம். 1 நிமிடத்திற்கும் 4 டாலர் என்று 9 நிமிடத்திற்கு பனம் கேட்டான் ரிக்ஷாகாரன், அது மிகவும் அதிகம் காரில் வந்தாலே 10 டாலருக்கு வந்திருப்போம் என்று பேரம் பேசி குறைத்தேன். நாளைக்கு ஊருக்கு கிளம்புவதால் நள்ளிரவில் நகரத்தை எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் என்று தான் அங்கு வந்தோம். அந்த நேரத்திலும் டைம் ஸ்கயரில் நல்ல கூட்டம். விளம்பரங்கள் ஓடி கொன்டே இருந்தது. ஒரு ஒன்றரை மணி நேரம் அங்கு உட்கார்ந்திருந்து விட்டு இரவு 2;30 மணி அளவில் விடுதிக்கு திரும்பினோம்.

மே 26, 11 மணி அளவில் காரில் ஊருக்கு கிளம்பினோம். நியூ ஜெரிஸியில் காருக்கு பெட்ரோல் போட்டோம். அமெரிக்காவில் நாம் தான் பெட்ரோல் பங்கில் பம்புகளை இயக்க வேண்டும் ஆனால் நியூ ஜெரிஸியில் இந்தியாவை போல் பெட்ரோல் போட ஊழியர்கள் இருக்கிறார்கள். மொத்தம் 10;30 மணி நேரம் காரை ஓட்ட வேண்டும். நல்ல வெயிலுடன் ஓட்டுவதற்கு இதமாக இருந்தது.வேக அளவை மீராமல், 2 மணி நேரத்திற்கு ஓரிடத்தில் நிறுத்தி ஓட்டி வந்தேன். திரும்பும் போது இயற்கை காட்சிகள் வரும் போது இரிந்தது போல் சிறப்பாக இல்லை. நிறைய பேர் வேக வரம்பை மீறியதால் காவலர்களால் பிடிக்கப்பட்டனர். இந்த முறை டோல் சாலைகள் வழியாக தான் வந்தேன். மொத்தம் 11 டாலர் சுங்கம் கட்டவேண்டி இருந்தது. இரவு 11;30 அளவில் வீட்டுக்கு வந்தோம். இன்னும் புத்துனர்ச்சி இருந்து கொன்டிருந்தது.

Monday, June 2, 2014

இந்தியாவின் மாபெரும் வேலி

ராய் மாக்ஸெம் - Roy moxham எழுதிய 'தீ க்ரேட் ஹெட்ஜ் ஆஃப் இந்தியா' இந்தியாவின் மாபெரும் வேலி என்ற புத்தகத்தை சில மாதங்களுக்கு முன் வாசித்து முடித்தேன். ராய் மாக்ஸாம் ஒரு பிரித்தானியர். நூலகத்தில் வேலை செய்யும் அவர், ஒரு பழைய புத்தக கடைக்கு செல்கிறார். அங்கு பழைய பிரிட்டிஷ் இந்தியா அதிகாரி ஒருவர் எழுதிய புத்தகத்தை பார்க்கிறார். ஒரு நூற்றான்டுகளுக்கு முன் தனது இந்திய வேலை அனுபவத்தை பற்றி அந்த அதிகாரி அந்த புத்தகத்தில் எழுதி இருக்கிறார். அதில் ஒரு விஷயம் ராயிற்கு ஆச்சரியமும் ஆர்வமும் அளிக்கிறது. அந்த புத்தகத்தை வாங்கி வந்து மேலும் படிக்கிறார்.


அதில் இந்தியாவை காஷ்மீரில் இருந்து ஒரிசா வரைக்கும் சரி பாதியாக  பிரிக்கும் உயிர் வேலியை பற்றிய குறிப்பு வருகிறது. அப்படிபட்ட விஷயமே தான் இதுவரை கேள்விபட்டதில்லையே, அப்படி ஒரு வேலி இருக்குமாயின் உலகின் மாபெரும் வேலி அதுவாகவே அமையுமே என அதை பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்புகிறார். அதற்காக பிரிட்டிஷ் நூலகங்களில் பல புத்தகங்களையும், கணக்கு வழக்குகளையும் தேடுகிறார். அவருக்கு அந்த வேலியை பற்றி எந்த தகவலும் கிடைப்பதில்லை. விடாமல் தேடுகிறார், கடைசியில் 1870க்கு முன்னால் எழுதப்பட்ட புத்தகம்  ஒன்றில் அதை பற்றிய குறிப்புகளை கண்டுப்பிடிக்கிறார்.

அந்த மாபெரும் வேலி, உப்பு வரியினால் உப்பு கடத்தபடுவதை தடுப்பதற்காக போடப்பட்ட உயிர் வேலி. ஆங்காங்கே உதிரி பாகங்களாய் காய்ந்த முள்ளாள் உருவான வேலி, ஒரு காலத்தில் ஆக்டேவியன் ஹ்யும் என்பவரின் யோசனையின் பேரில் முள் செடிகளாள் பல அடி உயரமான மாபெரும் உயிர் வேலியாய் இந்தியாவை இரண்டாக பிரிக்கிறது. இந்த வேலியை பற்றிய விஷயங்களை கடும் உழைப்பின் மூலம் சேகர்க்கிறார் ராய் மாக்ஸெம். இந்ந வேலி இந்தியா கிழக்கிந்திய கம்பனி ஆட்சியில் இருந்து நேரடி பிரித்தானிய ஆட்சிக்கு வந்த பின் விலக்கப்பட்டுவிட்டது. அதனால் அதிக ஆவனங்களிலும், மேப்களிளும் அந்த வேலியை பற்றிய தகவல் இல்லை. அந்த வேலி இருக்கும் போது உருவாக்கப்பட்ட ஆவனங்களிலும், வரைபடத்திலும் தான் அந்த வேலியின் இருந்த வழியும், அதன் தகவல்களும் கிடைக்கிறது. சேர்த்த அந்த தகவல்களுடன் அந்ய வேலியை எப்படியும் கண்டுபிடிப்பது என இந்தியா வருகிறார்.

அவர் சாதாரன நூலக காப்பாளர், இந்த ஆராய்ச்சிக்கு அவர் சொந்த வருவாயிலிருந்து தான் காசு செலவு செய்கிறார். இந்தியாவுக்கு விடுமுறைகளில் வருகிறார். இரண்டாம் ரக ரயில் பெட்டிகளில் பயனக்கிறார். தெரிந்த இந்திய நன்பர்களின் வீடுகளில் தங்குகிறார். உத்திர பிரதேசத்தில் கிராமம், கிராமமாக அந்த வேலியை தேடுகிறார். பல கிராம வாசிகளுடன் அதை பற்றி விசாரிக்கிறார். அதை பற்றி யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஒன்ற்றல்ல இரண்டல்ல, மூன்று முறை அதை தேடி இந்தியாவுக்கு வருகிறார். பழைய ஆவனங்களில் இருந்து அவர் குறித்து கொன்ட வேலியின் பாதையில் எல்லாம் வேலி இருந்தற்கு தடையமே இல்லை. சுதந்திரத்துக்கு பின் இந்தியா வளர்ச்சிக்கும், மாற்றதிற்கும் உள்ளானதால் அந்த வேலி இருந்த இடத்தில் சாலைகளும், வீடுகளும் உருவாகி இருக்கிறது. மேலும் அந்த மூள் செடியின் ஆயுள் அத்தனை வருடம் தாங்காது என்கிறார்கள் சிலர்.

இந்த விஷயத்தை மனதில் போட்டு புரட்டி கொன்டுருக்கிறார். நண்பர்களால் வித்தியானமாக பார்க்க படுகிறார். அவரால் விட்டு விட முடியவில்லை. மூன்றாம் முறை கடைசி முறை என இந்திய வருகிறார். இந்த முறை கிடைக்கவில்லை என்றால தேடலை விட்டு விடுவது என்று முடிவெடுக்கிறார். மூன்றும் முறையும் தன் நன்பரின் உறவுகார பையன் ஒருவன் அவருக்கு உதவிக்கு அவருடன வருகிறான். இந்த முறை ஒரு ஜீ.பி.ஸ் கருவியையும் உபயோகிக்கிறார். ஆபத்து நிறைந்த சம்பல் பகுதியின் கிராமங்களில் சென்று தேடுகிறார். கடைசியாக அவர் ஒரு கிராமத்தின் அருகில் அந்த வேலியின் உதிரி பாகங்களை அந்த கிராம வாசியின் உதவியுடன் கண்டு பிடிக்கிறார்.

உப்புக்கு வரியா? எதற்காக உப்பை தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் லாபம் வருமா? என்றால் வரும் என்பது தான் பதில். இந்தியாவில் அந்த காலகட்டத்தில் ஒரு கிராமத்துக்கு தேவையான உணவு பொருட்கள் எல்லாம் அந்த கிராமத்தாலேயே விளைவிக்கப்படுகிறது. ஆனால் உப்பிற்கு கடலை நம்பி தான் இருக்க வேன்டும். இதற்கு விதி விலக்கு ராஜஸ்தானின் சாம்பார் லேக். அதனால் உப்புக்கு அந்த காலத்தில் அதிக விலையுள்ள ஒரு பொருள்.  இந்தியா போன்ற நாடுகளில் வெப்பம் அதிகம், அதனால் வியர்வையில் உப்பு அதிகமாக வெளியேறுகிறது. அதனால் உப்பு ஒரு அத்தியாவசிய பொருளாகிறது. உப்பிற்கு வரி விதிப்பதன் மூலம் ஒவ்வொரு கைப்பிடி சோற்றிலிருந்தும் வரி வசுலிக்க முடியும். அதே நேரத்தில் உப்பை கடலோரங்களில் முடக்கி வரி வசுலிப்பது மிகவும் சுலபம்.

இந்த வரி வசுலினால் உப்பின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. ஒரு இந்திய விவசாயின் சம்பளம் அந்த காலத்தில் மிக மிக குறைவு. ஒரு மாதத்திற்கு ஓரிரு ரூபாய் தான். ஆனால் ஒரு மூட்டை உப்பின் விலை மூன்றறை ரூபாய். அதன் படி ஒரு விவசாயி தன் குடும்பத்தின் ஒரு வருட உப்பு செலவிற்கு கிட்டதட்ட அவன் இரண்டு மாத சம்பளத்தை செலவு செய்ய வேண்டும். இது பணம் படைத்தவருக்கு ஒரு கவலையாக இருக்கவில்லை, நில வரி ஏராமல் இருந்த்தால் அவர்களுக்கு மகிழ்ச்சி தான். ஏழைகள் தான் இதில் முற்றாக சுரண்டப்பட்டார்கள்.

அதன் விளைவாக அவர்கள் உணவில் உப்பு சேர்பதை குறைத்து கொன்டார்கள். வியர்வை சிந்தி தினமும் குறிப்பிட்ட அளவு உப்பை வெளியேற்றும் அவர்களுக்கு உப்பு மிக மிக முக்கியம். உப்பை குறைவினால் நோய்களுக்கு ஆளாகிறார்கள். ரத்த அழுத்தம் கூடுகிறது மயக்கம் அடைகிறார்கள். சிலர் மரணத்திற்கு ஆளாகிறார்கள். இந்த வியாதியின் தன்மை மருத்துவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. அவர்கள் சாதாரன காய்சலுக்கு தரும் சிகச்சையையே இதற்கும் தருகிறார்கள்.


பல்வேறு கோனங்களில் இந்த வேலியை ஆராய்கிறார் ராய். உப்பு வரியால் வெள்ளயர் அடையும் லாபம், அந்த சமயத்தில் பிரிட்டிஷ் அரசு என்ன செய்தது, மக்கள் எப்படி பாதிக்கபட்டார்கள், நோய்களும் அதன் காரனங்களும். எப்படி அந்த வேலி பேனி படி படியாக வளர்க்கப்பட்டது, அந்த வேலி எப்படி மேற்பார்வையிட்டனர் என்று எவ்வளவோ தகவல்கள் தருகிறார். 200 பக்கங்கள் கொன்ட இந்த புத்தகம் படிக்கும் ஆர்வத்தை தூன்டுவதாய், வெள்ளய ஆட்சியை பற்றிய பல தகவல் தருவதாய் இருக்கிறது. ஒரு பிரிட்டிஷ்காராய் இருந்தும் வெள்ளையர்கள் செய்த சூழ்ச்சியை அம்பலபடுத்தி இருக்கிறார். அவருக்கு நன்றி சொல்ல நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

நியூ யார்க் பயணக் கட்டுரை - 6

லிபர்ட்டி சிலை இருப்பது மன்ஹாட்டன் நகரின் தெற்கு கரையில். அங்கிருந்து கரைக்கு வந்து சிறிது தாரம் நடந்தால் ஃபினான்ஸியல் டிஸ்ட்ரிக்ட். வால் ஸ்ட்ரீட், உலக வர்த்தக மையம். விமானத்தால் தீவிரவாத நாச வேலைக்கு உள்ளான பழைய இரட்டை கோபுரங்களின் நினைவிடம் அங்கே தான் உள்ளது. முதலில் வால் ஸ்ட்ரீட் நடந்து சென்றோம்.

வால் ஸ்ட்ரீட் போகும் வழியிலேயே 'ஜார்ஜிங் புல்லின்' - துரத்தும் காளையின் உலோக சிலை இருந்தது. அதை யாரை துரத்துகிறது என்று தெரியாது. தினவுடன், முரட்டு தனமான உறுதியான காளை கோபத்துடன் துரத்துகிறது. இது அமெரிக்க பங்கு சந்தையின் உருவகம். அந்த பங்கு சந்தையின் திடமான ஆனால் கணிக்க முடியாத தன்மையை குறிக்கிறது. இதை சில இந்தி படங்களில் பார்த்திருக்கிறேன். நியூ யார்க்கை குறிப்புனர்த்த இது காட்டப்படும். ஆனால் அதன் முன் நின்று புகைபடம் எடுத்து கொள்ள பெரும் வரிசை நின்று கொன்டு இருந்தது. இதுக்கு கூட வரிசையா என்று தோன்றியது. அப்படி வரிசையில் நின்று எடுக்குமளவுக்கு இது முக்கியமில்லை என்றும் தோன்றியது. ஷாலினி வரிசையை கண்டு எரிச்சல் அடைந்து காளையின் பக்கவாட்டில் நின்று எடுத்து கொன்டால். அவளுக்கு அது முக்கியம், பொருளாதாரம் தொடர்பான படிப்பும் வேலையும் என்பதால். காளையை தத்துருபமாக வடித்திருந்தார்கள். சில வெள்ளை இளைஞர்கள் காளையின் பின் பக்கத்தில் குனிந்தும், காளையின் விரையை கையில் ஏந்தியவாரும் எடுத்து கொன்டனர். இந்திய இளைஞர்களுக்கு சற்றும் சளைக்காதவர்கள் அல்ல.

ஜார்ஜிங் புல்
அங்கிருந்து நகர்ந்து வால் ஸ்ட்ரீட் அருகில் நடந்தோம். ஷாலினி வால் ஸ்ட்ரீட் வழிகாட்டி தகட்டின் கீழ் நின்று புகைபடம் எடுத்து கொன்டாள். வால் ஸட்ரிட் என்பதால் ஒரு பிரம்மான்டமான எண்னமே மணதில் இருந்தது. உலக வரலாற்றில் ஒரு முக்கிய இடம் அதற்கு உண்டு. ஆனால் அந்த வீதி அவ்வளவு பிரம்மான்டமாய் இல்லை. வீதியின் அகலம் சாதாரனமாகவே இருந்தது. பெரும் பொருளாதார நிறுவனங்களின் அலுவலகங்கள் இருந்தது. எனக்கு அதிகம் எதுவும் தெரியவில்லை. ஷாலினிக்கு சில அடையாளம் தெரிந்தது. எனக்கு அங்கே நியூ யார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் மட்டும் தான் கேள்வி பட்ட பெயராக இருந்தது. வீதி வெகு சாதாரனாமாக இருந்தாலும் அங்கிருந்த கட்டிடங்களும் அதன் அமைப்பு முறையும் கம்பிரமாக இருந்தது. கட்டிடங்களின் முன் சுவரில் நுட்பமான வேலைப்பாடுகள் செய்யப்பட்டுருந்தது. நல்ல மண் நிற கல் கட்டங்கள் பார்க்க அழகாக இருந்தது.

கரையின் அருகில் இருந்ததால் வால் ஸ்ட்ரீட்  300 ஆண்டுகளுக்கு முன்னேரே ஒரு வணிக மையமாக விளங்கி இருக்கிறது. அதனுடன் இந்த வீதி, அடிமைகளை விற்கும் சந்தையாகவும் இருந்திருக்கிறது. அமெரிக்கவை வளத்தெடுத்த பிதாமகர்களின் ஒருவர், அமெரிக்க புரட்சி போரின் தளபதி, அமெரிக்காவின் முதல் குடியரசு தலைவரான ஜார்ஜ் வாஷிங்க்டன் 1789ல் பதவிபிரமானம் எடுத்து கொன்ட ஃபெடரல் ஹால் இங்கு தான் இருக்கிறது. அதன் நினைவாக இப்போது அங்கு ஜார்ஜ் வாஷிங்க்டனின் நினைவு சின்னம் இருக்கிறது.

ஃபெடரல் ஹால்
மேலும் வீதியின் உள் நடந்து சுற்றி பார்த்தோம். ஆங்காங்கே சில கட்டிடங்களின் வரலாற்று சிறப்பை எழுதி போட்டிருந்தார்கள். அப்படியே அந்த விதியில் இருந்து வெளியே வந்தால், முச்சந்தியில் ட்ரினிட்டி தேவாலயம் இருந்தது. சீரமைப்புகாக மூடப்பட்டிருந்தது. அங்கிருந்து 911 நினைவிடத்திற்கு சென்றோம். இரட்டை கோபுரங்கள் நின்ற இடம். அந்த இரு கோபுரங்களும் இடிந்து விழுந்த இடத்தில் இரு அகன்ற சதுர குழியை அமைத்திருக்கிறார்கள். அதில் குழியில் கரும்பளிங்கு கற்கள் பதித்திருக்கிறார்கள. குழியில் தன்னிர் ஊற்று அமைத்திருக்கிறார்கள். அந்த குழியின் நடுவே இன்னோரு குழி ஆழமாய், அடித்தரை கண்ணுக்கு தெரியாதது போல் செல்கிறது. அதனுள் தண்ணிர் வழிந்து செல்கிறது.

அந்த நினைவகத்தை சுற்றி இருந்த இடுப்பளவு சுவற்றில் அந்த விபத்தில் இறந்தவர்களின் பெயர்களை செதுக்கி வைத்துள்ளார்கள். அதில் பல இந்திய பெயர்களும் இருந்தது. அதை ஒட்டியே அந்த விபத்தின் அருங்காட்சியகம் இருந்தது. மாலையாகி விட்டதால் மூடப்பட்டிருந்தது. அருகிலேயே புதிதாய் கட்டபட்ட புது உலக வர்த்தக மையம் இருக்கிறது.  நினைவகத்தின் அருகில் இன்னும் சில கட்டுமான பனிகள் நடந்து கொன்டுதான் இருந்தது. நிறைய காவலர்கள் நின்று கொன்டு இருந்தார்கள். யாரோ அந்த நினைவிடத்தில் ஒரு பூங்கோத்து வாங்கி வைத்திருந்தார்கள். பார்த்துவிட்டு அகன்று நடந்து வந்த போது இந்திய முகங்களுடன், ஒரு இஸ்லாமிய குடும்பம் குழந்தைகளோடு நின்று கொன்டு இருந்தார்கள். அவர்கள் மனதில் என்ன ஓடும்? நிச்சயம் என் மனதில் ஓடிய நினைவுகளாக தான் இருக்கும்.

911 நினைவகம்
அடுத்து எங்கே போவது? நியூ யார்க் வந்தால் பார்ப்பதற்காக சுற்றுலா தளங்கள் இருக்கும், ஆனால் உன்மையான ஊரை எப்படி சுற்றி பார்ப்பது. மேப்பை எடுத்து பார்த்தோம். சைனா டவுன், லிட்டில் இட்டாலி ஆர்வத்தை தூன்டியது. அமெரிக்க வந்தும் அந்நாட்டு மக்கள் தங்களுக்கு என்று ஒரு பகுதியை நிறுவி கொன்டு வாழ்கிறார்கள். அமெரிக்கர்களுக்கு மத்தியில் வாழும் குடும்பங்களை விட இப்படி கூட்டாக வாழும் மக்கள் அவர்களின் கலச்சாரத்தை இன்னும் வலுவாக பின்பற்றுவார்கள், அவர்களின் பிரத்யேக தேவைக்கான கடைகள் அங்கு உருவாகி இருக்கும். அங்கு செல்ல எந்த சப் வே ரயில் என்றும் தெரியவில்லை, காலும் கடுக்க ஆரம்பித்தது. எங்காவது சிறிது நேரம் உட்கார வேண்டும் போலிருந்தது. ஒரு சிறு இந்திய உணவகம் தென்ப்பட்டது அங்கு சென்று இரு சமோசாவும், மசாலா டீயும் சாப்பிட்டோம். பிறகு கிளம்பி சென்று ரயிலில் ஏறினோம். இரண்டு ரயில் மாறி செல்ல வேண்டும். ரயில் நிலையத்தில் ஒரு இளைஞன் கிடார் வாசித்து கொன்டு பாட துவங்கினான். சப் வே ரயில் தன்டவாளங்கள் அழுக்கும் குப்பையுமாய் எலிகள் ஓட இருந்தது.

சைனா டவுன் சென்று இறங்கினோம், ஒரே  சீன முகங்கள். திடீர் என்று சென்னையின் ஒரு கடைவீதியில் நுழைந்தது போலிருந்த்து. அமெரிக்காவில் வழக்கமாக பார்க்கும் கடைகள் போல அல்லாமல் சென்னை பான்டி பஜாரில் இருப்பது போன்ற கடைகள். நெருக்கமான கடைகள். மின் அலங்கார விளக்குகள் தொங்கி கொன்டு இருந்தது.  எல்லா கடை பெயர்களும் சீன மொழியிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்தது. அமெரிக்க கடைகள், சேஸ் பாங்க் அனைத்தும் சீன மொழியிலும் பெயர் எழுதப்பட்டிருந்தது. நிறைய நகை கடைகள் இருந்தது. சின்ன சின்ன துனி கடைகளில் பல முஸ்லிம் பெயர்களுடன், இந்திய முஸ்லிம் இளைகர்களுடன் இருந்தது. அந்நகரத்தின் சாலை நெரிசலை விட இங்கு அதிகமாகவும் இரைச்சலுடனும் இருந்தது போலிருந்த்து. அங்கு ஒரு கடையில் ஒரு சீனப்பென் வேடிக்கையான தனது ஆங்கில உச்சரிப்புடன் 'கம் இன் அன்ட் சீ' என்று அழைத்து கொன்டு இருந்தால்.
சைனா டவுன்




அப்படியே லிட்டில் இட்டாலி உள்ளே சென்றோம். இட்டாலி வீதி ஆரம்பித்ததுமே ரெஸ்டாரன்டுகள், பிட்சாரியாகள் தொடங்கிவிட்டது. பட்லர் உடையனிந்து உணவு பரிமாறி கொன்டிருந்தார்கள். கடைக்குள் மட்டுமில்லாமல் வீதீயின் திறந்த வெளியிலும் மேசைகள் போட்டிருந்தார்கள். உள்ளுர் மக்கள், இளைஞர்கள் பலர் அங்கு வந்து சாப்பிட்டு கொன்டு இருந்தார்கள். ஒரு நெடும் வீதி முழுக்க ஒரே ரெஸ்டாரன்டுகள் தான் வேறு கடையே பார்க்கவில்லை.

லிட்டில் இட்டாலி

 அந்த வீதியில் இருந்து இன்னும் உள்ளே சென்றதும் திருவிழா போல பாட்டும், ஒளியுமாய் ஒரு வீதியில் கடைகள் அமைத்திருந்தார்கள். உணவு கடை, ஆடை அணிகலன்கள், பொம்மைகள், விளையாட்டுகள் என்று வரிசையாக கடைகள். அங்கு ஒரியோ பிஸ்கட்டை மாவில் முக்கி என்னையில் தாலித்து தருகிறார்கள், நம்மூர் போன்டா போல. அதை சில வெள்ளையர்கள் வாங்கினார்கள். நம் வடை போல் ஒரு பண்டம் இருந்தது, அது என்ன என்று கேட்டேன், ஸெப்பொலி (Zeppole) என்றார்கள், இரண்டு டாலருக்கு இரண்டு என்று வாங்கினேன். சர்க்கரை மாவில் தொட்டு கொடுத்தார்கள். வெறும் மாவினால் செய்யப்பட்டது. உப்பு காரம் எதுவும் இல்லை. அதை சர்க்கரை மாவில் தொடாமல் சாப்பிட்டாலும் நன்றாக இருந்திருக்கும். இவர்கள் சிற்றுன்டியில் இனிப்பை தவிர வேறு சுவையை சேர்க்க மாட்டார்கள் போலிருக்கிறது. தொப்பி, கை பை, பொம்மை என பலவையும் விற்று கொன்டிருந்த இடத்தில் ஒரு விநாயகர் படம் போட்ட திரை துனியையும் விற்று கொன்டிருந்தார்கள்.


ஸெப்பொலி
அங்கிருந்து அப்படியே சோஹோ எனும் பகுதியின் வழியாக நடந்தோம். அந்த பகுதியில் அவ்வளவு ஆர்ப்பாட்டம் இல்லை. நிறைய டிசைனர் கடைகள் இருப்பதாக ஷாலினி சொன்னாள். அங்கு ஒரு பெஞ்சில் சற்று அமர்ந்தோம். அருகில் ஒருவர் ஜாஸ் இசையை ஸ்பீக்கரில் ஒலிக்கவிட்டு அமர்ந்திருந்தார். இரவு நேரங்களில் ஜோடியாக பல உள்ளுர்வாசிகள் வெளியே வருகிறார்கள். ஆண், பெண் இருவருமே கச்சிதமாக உடை அணிந்திருக்கிறார்கள். அவர்கள் அதற்கு எவ்வளவு நேரம் செலவளிப்பார்கள் என்று தான் எனக்கு தோன்றியது. நாயை நடைக்கு அழைத்து கொன்டு சிலர் சென்றனர்.  இரவு சாப்பிட்டுவிட்டு விடுதிக்கு திரும்பினோம்.

Sunday, June 1, 2014

நியூ யார்க் பயணக் கட்டுரை - 5

மே 24 அன்று லிபர்டி ஸ்டாட்சுவிற்கு செல்ல முடிவு செய்திருந்தோம். மதியம் ஒரு மணி அளவில் நியூ யார்க்கிற்கு ரயிலில் சென்றோம். அங்கிருந்து பேட்டரி பார்க் என்ற இடத்தில் இருந்த்து படகின் மூலம் லிபர்ட்டி சிலைக்கு செல்ல வேண்டுமாம். மேப்பை பார்த்து பேட்டரி பார்க்கிற்கு நடப்பதற்காக ஒரிடத்தில் இறங்கி கொன்டோம். ஆனால் அது தவறான இடம். அங்கிருந்து ஃபெர்ரி படகு ஏற்றதிற்கு வெகு தொலைவு நடந்தாக வேண்டும். அதனால் ஒரு டாக்ஸியில் செல்வது என்று, ஒரு டாக்ஸியில் ஏறினோம். இந்திய முகத்துடன் ட்ரைவர். பாக்கிஸ்தானியாக கூட இருந்திருக்கலாம். நியூ யார்க்கின் டாக்ஸிகளில் பெரும்பான்மையாக இந்திய, பாக்கிஸ்தான், பங்கலாதேஷ் காரர்கள்தான் ஓட்டுகிறார்கள். 9 டாலர் ஆனது, 10 டாலராய் குடுத்துவிட்டு இறங்கினோம்.

அங்கே ஒரு காபி குடித்துவிட்டு லிபர்டி ஸ்டாட்சுவிற்கு டிக்கட் வாங்கும் இடத்தை காண சென்றோம். மேப்பில் துள்ளியமாக இடத்தை பார்த்துவிட்டு வராததனால் இடத்தை கண்டுபிடிப்பது சிரமமாகி விட்டது. ஏனென்றால் அங்கு ஏகப்பட்ட படகு தளங்கள். அங்கு சுற்றுலா பயணிகளுக்கு சரியாக வழிகாட்டும் வகையில் வழிகாட்டும் பலகைகள் இல்லை. டிக்கட் கவுண்டருக்கு ஒரு பெரிய வரிசை நின்று கொன்டு இருந்தது. நாங்கள் நியூ யார்க் பாஸ் வைத்து இருந்ததால் எங்களுக்கு அந்த வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. சீக்கிரமே டிக்கட் வாங்கி கொன்டு வெளியே வந்தோம் அங்கு அதைவிட பெரிய வரிசை. அதில் சென்று நின்றோம். இங்கு நியூ யார்க் பாஸால் வரிசையை தவிர்க்க முடியாது. ஆனால் அந்த பாஸின் விளம்பரங்களில் எந்த க்யூவிலும் நிற்க தேவையில்லை என்பது போல தான் எழுதியிருந்தார்கள்.

ஒரு அரைமணி நேரம் நின்று இருப்போம். நிறைய இந்தியர்களும் க்யூவில் இருந்தார்கள். முதியவர்கள், குழந்தைகளுடன் வந்திருந்தார்கள். குழந்தைகள் ப்ராமில் இருந்ததால் எந்த கவலையும் இல்லாமல் எல்லாரையும் வேடிக்கை பார்த்து கொன்டிருந்தது. அந்த நேரத்தில் குழந்தைகள் மேல் ஒரு பொறாமை வந்தது. ஒரு வயதான கருப்பர் நின்று கிடார் வாசித்து பாடி கொன்டு இருந்தார். எல்லாருக்கும் வாழ்த்து சொல்லி கின்டல் செய்து மகிழ்ச்சியாய் இருந்தார். அவருடைய டப்பாவில் சிலர் காசு போட்டனர். உள்ளே சென்றோம். பாதுகாப்பு பரிசோதனை செய்தார்கள். ஏறகுறைய எல்லா இடங்களிலுமே விமான நிலையத்தில் செய்வது போல பாதுகாப்பு சோதனை செய்தார்கள். ஃபெர்ரி படகு வந்து நின்றது. அதில் ஏறி கொன்டோம்.

மூன்று அடுக்கு கொன்ட படகு அது. எல்லாரும் ஏறியவுடன் மேல் தளத்திற்கும், ஜன்னலுக்கும் தான் வேகமாக சென்றார்கள். நாங்கள் மேல் தளத்திற்கு சென்றோம். ஒரங்களில் எல்லாம் அடைத்து நின்று கொன்டு புகைபடம் எடுக்க தொடங்கினார்கள். இந்தியர்களும், சீனர்களும் இடம் பிடிப்பதில் வள்ளுனர்களாக இருக்கிறார்கள். அது புரிந்து கொள்ள கூடியதே. நகரத்தின் உயர்ந்த கட்டங்களையே பார்த்து கொன்டு வந்த கூட்டம் சட்டென்று மறு திசைக்கு திரும்பியது. லிபர்டி சிலை பிரம்மான்டமாய் தெரிய துவங்கியது. பச்சை நிறமான பிரம்மான்டமான சிலை. இந்த 'வாய்ப்பு தரும் தேசத்தை' நோக்கி வருவபவர்களுக்கு கலங்கரை விளக்கம் போல் கைதூக்கி அழைக்கும் சின்னம். இந்த ஐக்கிய மாநாட்டின் பெருமிதத்தை பறை சாற்றும் ஒரு அடையாளம்.

படகிலிருந்த எல்லா கைகளும் அதை கேமராவில் பதிவு செய்து கொன்டுருந்தது. உலகிலேயே அதிகம் புகைபடம் எடுக்கப்பட்ட இடங்களை பட்டியலிட்டால் இந்த சிலை அதில் மிகவும் மேலே இடம் பிடிக்கும். எங்களது படகு அந்த சிலையை மெதுவாய் வலம் வந்து கரையை சென்று தொட்டது.இறங்கி நடத்தோம். வாயிலில் அனைவருக்கும் ஆடியோ டுர் என்று ஒரு பதிவு செய்யப்பட்ட ஒலி வழிகாட்டியை கையில் கொடுத்துவிடுகிறார்கள். ஆனால் அது அவ்வளவு உபயோகமாக இல்லை. கண்னுக்கு முன் அவ்வளவு பிரம்மான்டமாக இருக்கும் காட்சிக்கு முன்னால் அந்த ஒலியில் கவனம் செலுத்த முடியவில்லை. அப்படியே சிலையின் பின் புறத்திலிருந்து முன்புறத்திற்கு நடந்தோம்.

சிறப்பு கட்டனத்தின் பேரில் லிபர்டி சிலையின் உள்ளே சென்று பாதத்தையும், கிரிடத்தைநும் பார்க்க அனுமதிக்கிறார்கள். ஆனால் அந்த டிக்கட்டுகள் முன் பதிவு செய்து வர வேண்டும், அதுவம் அது பல மாதங்களுக்கு முன்பாகவே விற்று தீர்ந்து விடுமாம். அதனால் வெளியே தான் சுற்றி பார்த்தோம். லிபர்டி சிலை மன்ஹாட்டான் நகரத்திற்கும் நியூ ஜெர்சிக்கும் நடுவில் ஒரு சிறு தீவில் இருக்கிறது. தீவின் விளிம்புகளில் அலைகள் வேகமாக அடித்து தெரித்து கொன்டு இருந்தது. சீகல் பறவை பறந்து கொன்டு இருந்தது. சிலையை சுற்றி தீவின் விளிம்பில் ஒரு அகல நடைபாதை இருந்தது. நல்ல காட்சி கிடைக்கும் இடத்தில் எல்லாம் நின்று புகைபடம் எடுத்து கொன்டர்கள். ஜோடியாக, குடும்பத்துடன் வந்தவர்கள் எல்லாரும் அடுத்தவர்களிடம் கேமராவை குடுத்து குடும்ப புகைபடம் எடுத்து கொன்டனர். நானும் சில பேருக்கு எடுத்து தந்தேன். எனக்கு கேமரா தந்தவர்கள் எல்லாரும் ஒரே மாதிரியான கேமரா தான் தந்தார்கள் கருப்பு நிற கெனான் எஸ் எல் ஆர் கேமரா. எஸ் எல் ஆர் கேமரா, புகைபட வல்லுனர்களுக்கான கேமரா என்பது மாறி வெகு ஜன கேமராவாகிவிட்டது. நாங்களும் பல புகை படங்கள் எடுத்து கொன்டோம்.


ஒருவர் கூட அந்த சிலையை ஒரு நிமிடம் கூட கவனிக்கவில்லை. புகைபட்டதில் தான் முழு கவனமும். அந்த சிலையின் முன் குதிப்பது போல், சிலையின் தலையை பிடித்து தூக்குவது போல, சிலைக்கு மூக்கு நோன்டி விடுவது போல என்று ஆயிரம் நிலைகளில் எடுத்து கொன்டனர். அந்த சிலையை அதைவிட உயரமான ஒரு கல் மேடையில் நிறுவி இருந்தார்கள். சிலை உலோகத்தால் ஆனாது கடல் காற்றினால் பச்சையாக ஆகியிருக்கிருக்கிறது. அதனை கையில் ஒங்கி இருக்கும் பந்தத்தில் சுவாலை மட்டும் தங்க நிறத்தில் இருந்தது. உடல் முழுவதும் நிறைய துணிகளை சுற்றி இருந்தது. வயதான ஆனால் திடமானான அன்னை போல் இருந்தது. சிலையின் கைகள் பருமனாக இருந்தது. முகம் இருகி பட்டையாக இருந்தது. அந்த சிலையின் உச்சியில் எந்த பறவையுமே பறக்கவில்லை. எதிர்பாராத வண்ணம் ஒரு ஐந்து ரானுவ எலிகாப்டர்கள் தீவை ஒட்டி பறந்து சென்றது.

ஐக்கிய மாகானத்திற்காக பிரான்ஸ் அன்பளிப்பாக தந்தது அந்த சிலை. பிரம்மான்டமான இந்த சிலை பல பாகங்களாய் பிரிக்கப்பட்டு கப்பலில் 1886ல் நியூ யார்க் வந்து சேர்ந்தது. அந்த சிலையை ஒன்றாக பொருத்தி நிறுவி இருக்கிறார்கள். சிலையின் உயரம் மட்டும் 151 அடி, அது தரையில் 300 அடி இருக்கும் வகையில் கல் மேடை அமர்த்தி நிறுவி இருக்கிறார்கள். இந்த சிலையின் முகம் அந்த சிற்பத்தை வடித்தவரின் அன்னையின் முக சாயல் கொன்டது. இந்த சிலை சுதந்திரத்தற்கான ரோம பெண் கடவுளான லிபர்டாவை குறிக்கிறது.

அப்படியே வந்த வழியே திரும்பி ஒரு சுற்று வந்து படகில் ஏறினோம். இந்த டிக்கட்டிலேயே அருகில் இருக்கும் எல்லிஸ் தீவிற்கும் அனுமதி உண்டு. அங்கே ஒரு அருங்காட்சியகம் உள்ளது. அங்கு செல்வதும் படகில் தான். 20 நிமிடம் வரிசையில் நின்று படகில் ஏறினோம். படகு சவாரி, லிபர்டி சிலை, அருங்காட்சியகம் எல்லாவற்றிர்க்கும் சேர்த்து 14 டாலர் தான் டிக்கட் என்பது மிக குறைவு தான்.

எல்லிஸ் தீவில் தான் கப்பல் வழியாக வருபவர்களுக்கு குடியேற்றம் நடந்திருக்கிறது. இப்போது அதே கட்டிடத்தை சீரமைத்து அருங்காட்சியகம் ஆக்கி இருக்கிறார்கள். 1875 - 1925 வரையிலுமான கால கட்டதில் அதிகமான குடியேற்றம் இங்கு நடந்திருக்கிறது. அந்த மக்கள் எப்படி பரிசோதனை செய்யபட்டனர், எப்படி குடியேற்றதிற்கு தேர்வு செய்யப்பட்டனர், நிராகரிக்க பட்டவர்கள் என்ன செய்தார்கள், தற்காலிகமாக நிறுத்தி வைக்கபட்டவர்கள் என்ன ஆனார்கள். அனுமதிக்கப்பட்டவர்களுக்கு என்ன சேவை தரப்பட்டது. எவ்வளவு நபர்கள் ஒரு நாளைக்கு குடியேற்றதிர்க்காக காத்திருப்பார்கள். அவர்களின் உடமைகள் எப்படி அவர்களுக்கு கொன்டு சேர்க்கப்பட்டது என்று விளக்கமாக காட்சி படுத்தி இருந்தார்கள்.

இது போக  அமெரிக்கவை தேடி மக்கள் ஏன் வந்தார்கள். எந்த நாட்டில் இருந்து மக்கள் எந்தேந்த காலகட்டதில் இருந்து வந்தார்கள். வந்து அவர்களுக்கு இங்கு என்னன்ன கஷ்டங்கள் ஏற்பட்டது. அவர்கள் அமேரிக்காவிற்கு எப்படி பங்களித்தார்கள், அவர்களை அந்நாட்டு மக்கள் எப்படி எதிர் கொன்டார்கள் என பலவகையான விபரங்கள் இருந்தது.எனக்கு மிகவும் ஆர்வமிக்கதாக இருந்தது அங்கு கிடைத்த தரவுகள். என்ன தான் புத்தகம், இனையம் இருந்தாளும், ஒரு அருங்காட்சியகத்திற்கு செல்லும் போது அங்கு மாதிரியுடன் நமக்கு கிடைக்கும் தகவல்கள் கண்டிப்பாக படிக்கும் வண்ணம் உபயோகமாக இருக்கிறது. அருங்காட்சியகத்திலேயே அரை மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு டாக்குமென்றி படம் கான்பிக்கபடுகிறது, ஐலேன்ட் ஆ்ஃப் ஹோப், ஜலேன்ட் ஆஃப் டியர்ஸ் என்று அந்த தீவினை பற்றிய டாக்குமென்டரி.


அமேரிக்கா நோக்கி மக்கள் வர ஆரம்பித்தற்கு முக்கியமான காரனங்கள் சிலவே இருந்திருக்கிறது. முதலாவதாக, மதம். ஐரோப்பாவில் ரோமன் கத்தோலிக்க சபைக்கு எதிராக பதினாராம் நூற்றான்டில் உருவான சில சபைகள். அவைகளை மொத்தமாக ப்ரோட்டஸ்டான்ட் கிறித்துவர்கள் எனப்படுவர். அவர்கள் கத்தோலிக்க சபையால் ஒடுக்கப்பட்டதின் காரனமாக இந்த புது தேசத்திற்கு பயனம் செய்திருக்கிறார்கள். தூய்மைவதிகள், ப்ரெஸிபிட்டேரியன்கள், லூத்தரன்கள் என பல்வேறு கிறித்துவ பிரிவுகளும் இங்கு வந்திருக்கிறது. இரான்டாவது, தொழில் அதிபர்கள், அமேரிக்காவின் பரந்த நில பகுதியும் அதன் வளங்களும் ஒரு தங்க சுரங்கம் போல் மக்களை ஈர்த்திருக்கிறது. புகையிலை ஆரம்ப காலத்தில் மிகவும் லாபகரமான தொழிலாக இருந்திருக்கிறது. மூன்றாவது காரனம், தொழில் புரட்சி, ஐரோப்பாவின் நவின கண்டுபிடிப்புகளும் அதனால் உன்டான தொழிற்சாலைகளும் விவசாயிகளை ஓரம் கட்டிவிட்டது. அதனால் பிழைப்புக்காக பல பேர் இங்கு ஓடி வந்திருக்கிறார்கள்.

உருளை கிழங்கு பஞ்சத்தால் ஐரிஷ் மக்களும், ஜன தொகை நெருக்கடியால் சீனர்களும் வந்திருக்கிறார்கள். இத்தாலியர்கள், கத்தோலிக்கர்கள், யூத மக்கள் எல்லாம் கடைசியாக தான் வந்திருக்கிறார்கள். இந்திய மக்களின் குடியேற்றத்தை பற்றி எந்த தகவலும் இல்லை. ஒரு வேலை தனி தனியாக அல்லது சிறு கூட்டங்கலாக குடியேரி இருப்பின் குறிப்பிடும் படியாக இருந்திருக்காது.

அருங்காட்சியகத்தில் மூன்று தளங்கள் இருந்தது, சுற்றி பார்க்க பார்க்க கால் வலி தாங்க முடியவில்லை. பார்த்து வெளியே வந்தால் மழை பெய்து கொன்டு இருந்தது. ஒரு படகு நிரம்பி மக்கள் போக நாங்கள் அடுத்த படகில் காத்திருந்து ஏறி கொன்டோம். மழையினால் மக்கள் படகில் கூரைக்கு அடியில் அடைத்து நின்று கொன்டு வந்தார்கள். படகில் இருந்து இறங்கும் போது மழை ஓய்ந்திருந்தது.  வெளி செல்லும் வழியில், ப்ளாஸ்டிக் டப்பாவை கவுத்தி போட்டு ஒரு கருப்பு இளைஞன் வாசித்து கொன்டு இருந்தான். கேரிகேட்சர் ஒவியங்கள் வரைபவர்கள் ஒரு இந்திய ஜோடியை வரைந்து கொன்டு இருந்தான். வயிறு தன் இருப்பை உனர்த்தியது சப் வே உணவகத்திற்கு சென்று வெஜி சப் சாப்பிட்டோம்.