Monday, June 2, 2014

இந்தியாவின் மாபெரும் வேலி

ராய் மாக்ஸெம் - Roy moxham எழுதிய 'தீ க்ரேட் ஹெட்ஜ் ஆஃப் இந்தியா' இந்தியாவின் மாபெரும் வேலி என்ற புத்தகத்தை சில மாதங்களுக்கு முன் வாசித்து முடித்தேன். ராய் மாக்ஸாம் ஒரு பிரித்தானியர். நூலகத்தில் வேலை செய்யும் அவர், ஒரு பழைய புத்தக கடைக்கு செல்கிறார். அங்கு பழைய பிரிட்டிஷ் இந்தியா அதிகாரி ஒருவர் எழுதிய புத்தகத்தை பார்க்கிறார். ஒரு நூற்றான்டுகளுக்கு முன் தனது இந்திய வேலை அனுபவத்தை பற்றி அந்த அதிகாரி அந்த புத்தகத்தில் எழுதி இருக்கிறார். அதில் ஒரு விஷயம் ராயிற்கு ஆச்சரியமும் ஆர்வமும் அளிக்கிறது. அந்த புத்தகத்தை வாங்கி வந்து மேலும் படிக்கிறார்.


அதில் இந்தியாவை காஷ்மீரில் இருந்து ஒரிசா வரைக்கும் சரி பாதியாக  பிரிக்கும் உயிர் வேலியை பற்றிய குறிப்பு வருகிறது. அப்படிபட்ட விஷயமே தான் இதுவரை கேள்விபட்டதில்லையே, அப்படி ஒரு வேலி இருக்குமாயின் உலகின் மாபெரும் வேலி அதுவாகவே அமையுமே என அதை பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்புகிறார். அதற்காக பிரிட்டிஷ் நூலகங்களில் பல புத்தகங்களையும், கணக்கு வழக்குகளையும் தேடுகிறார். அவருக்கு அந்த வேலியை பற்றி எந்த தகவலும் கிடைப்பதில்லை. விடாமல் தேடுகிறார், கடைசியில் 1870க்கு முன்னால் எழுதப்பட்ட புத்தகம்  ஒன்றில் அதை பற்றிய குறிப்புகளை கண்டுப்பிடிக்கிறார்.

அந்த மாபெரும் வேலி, உப்பு வரியினால் உப்பு கடத்தபடுவதை தடுப்பதற்காக போடப்பட்ட உயிர் வேலி. ஆங்காங்கே உதிரி பாகங்களாய் காய்ந்த முள்ளாள் உருவான வேலி, ஒரு காலத்தில் ஆக்டேவியன் ஹ்யும் என்பவரின் யோசனையின் பேரில் முள் செடிகளாள் பல அடி உயரமான மாபெரும் உயிர் வேலியாய் இந்தியாவை இரண்டாக பிரிக்கிறது. இந்த வேலியை பற்றிய விஷயங்களை கடும் உழைப்பின் மூலம் சேகர்க்கிறார் ராய் மாக்ஸெம். இந்ந வேலி இந்தியா கிழக்கிந்திய கம்பனி ஆட்சியில் இருந்து நேரடி பிரித்தானிய ஆட்சிக்கு வந்த பின் விலக்கப்பட்டுவிட்டது. அதனால் அதிக ஆவனங்களிலும், மேப்களிளும் அந்த வேலியை பற்றிய தகவல் இல்லை. அந்த வேலி இருக்கும் போது உருவாக்கப்பட்ட ஆவனங்களிலும், வரைபடத்திலும் தான் அந்த வேலியின் இருந்த வழியும், அதன் தகவல்களும் கிடைக்கிறது. சேர்த்த அந்த தகவல்களுடன் அந்ய வேலியை எப்படியும் கண்டுபிடிப்பது என இந்தியா வருகிறார்.

அவர் சாதாரன நூலக காப்பாளர், இந்த ஆராய்ச்சிக்கு அவர் சொந்த வருவாயிலிருந்து தான் காசு செலவு செய்கிறார். இந்தியாவுக்கு விடுமுறைகளில் வருகிறார். இரண்டாம் ரக ரயில் பெட்டிகளில் பயனக்கிறார். தெரிந்த இந்திய நன்பர்களின் வீடுகளில் தங்குகிறார். உத்திர பிரதேசத்தில் கிராமம், கிராமமாக அந்த வேலியை தேடுகிறார். பல கிராம வாசிகளுடன் அதை பற்றி விசாரிக்கிறார். அதை பற்றி யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஒன்ற்றல்ல இரண்டல்ல, மூன்று முறை அதை தேடி இந்தியாவுக்கு வருகிறார். பழைய ஆவனங்களில் இருந்து அவர் குறித்து கொன்ட வேலியின் பாதையில் எல்லாம் வேலி இருந்தற்கு தடையமே இல்லை. சுதந்திரத்துக்கு பின் இந்தியா வளர்ச்சிக்கும், மாற்றதிற்கும் உள்ளானதால் அந்த வேலி இருந்த இடத்தில் சாலைகளும், வீடுகளும் உருவாகி இருக்கிறது. மேலும் அந்த மூள் செடியின் ஆயுள் அத்தனை வருடம் தாங்காது என்கிறார்கள் சிலர்.

இந்த விஷயத்தை மனதில் போட்டு புரட்டி கொன்டுருக்கிறார். நண்பர்களால் வித்தியானமாக பார்க்க படுகிறார். அவரால் விட்டு விட முடியவில்லை. மூன்றாம் முறை கடைசி முறை என இந்திய வருகிறார். இந்த முறை கிடைக்கவில்லை என்றால தேடலை விட்டு விடுவது என்று முடிவெடுக்கிறார். மூன்றும் முறையும் தன் நன்பரின் உறவுகார பையன் ஒருவன் அவருக்கு உதவிக்கு அவருடன வருகிறான். இந்த முறை ஒரு ஜீ.பி.ஸ் கருவியையும் உபயோகிக்கிறார். ஆபத்து நிறைந்த சம்பல் பகுதியின் கிராமங்களில் சென்று தேடுகிறார். கடைசியாக அவர் ஒரு கிராமத்தின் அருகில் அந்த வேலியின் உதிரி பாகங்களை அந்த கிராம வாசியின் உதவியுடன் கண்டு பிடிக்கிறார்.

உப்புக்கு வரியா? எதற்காக உப்பை தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் லாபம் வருமா? என்றால் வரும் என்பது தான் பதில். இந்தியாவில் அந்த காலகட்டத்தில் ஒரு கிராமத்துக்கு தேவையான உணவு பொருட்கள் எல்லாம் அந்த கிராமத்தாலேயே விளைவிக்கப்படுகிறது. ஆனால் உப்பிற்கு கடலை நம்பி தான் இருக்க வேன்டும். இதற்கு விதி விலக்கு ராஜஸ்தானின் சாம்பார் லேக். அதனால் உப்புக்கு அந்த காலத்தில் அதிக விலையுள்ள ஒரு பொருள்.  இந்தியா போன்ற நாடுகளில் வெப்பம் அதிகம், அதனால் வியர்வையில் உப்பு அதிகமாக வெளியேறுகிறது. அதனால் உப்பு ஒரு அத்தியாவசிய பொருளாகிறது. உப்பிற்கு வரி விதிப்பதன் மூலம் ஒவ்வொரு கைப்பிடி சோற்றிலிருந்தும் வரி வசுலிக்க முடியும். அதே நேரத்தில் உப்பை கடலோரங்களில் முடக்கி வரி வசுலிப்பது மிகவும் சுலபம்.

இந்த வரி வசுலினால் உப்பின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. ஒரு இந்திய விவசாயின் சம்பளம் அந்த காலத்தில் மிக மிக குறைவு. ஒரு மாதத்திற்கு ஓரிரு ரூபாய் தான். ஆனால் ஒரு மூட்டை உப்பின் விலை மூன்றறை ரூபாய். அதன் படி ஒரு விவசாயி தன் குடும்பத்தின் ஒரு வருட உப்பு செலவிற்கு கிட்டதட்ட அவன் இரண்டு மாத சம்பளத்தை செலவு செய்ய வேண்டும். இது பணம் படைத்தவருக்கு ஒரு கவலையாக இருக்கவில்லை, நில வரி ஏராமல் இருந்த்தால் அவர்களுக்கு மகிழ்ச்சி தான். ஏழைகள் தான் இதில் முற்றாக சுரண்டப்பட்டார்கள்.

அதன் விளைவாக அவர்கள் உணவில் உப்பு சேர்பதை குறைத்து கொன்டார்கள். வியர்வை சிந்தி தினமும் குறிப்பிட்ட அளவு உப்பை வெளியேற்றும் அவர்களுக்கு உப்பு மிக மிக முக்கியம். உப்பை குறைவினால் நோய்களுக்கு ஆளாகிறார்கள். ரத்த அழுத்தம் கூடுகிறது மயக்கம் அடைகிறார்கள். சிலர் மரணத்திற்கு ஆளாகிறார்கள். இந்த வியாதியின் தன்மை மருத்துவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. அவர்கள் சாதாரன காய்சலுக்கு தரும் சிகச்சையையே இதற்கும் தருகிறார்கள்.


பல்வேறு கோனங்களில் இந்த வேலியை ஆராய்கிறார் ராய். உப்பு வரியால் வெள்ளயர் அடையும் லாபம், அந்த சமயத்தில் பிரிட்டிஷ் அரசு என்ன செய்தது, மக்கள் எப்படி பாதிக்கபட்டார்கள், நோய்களும் அதன் காரனங்களும். எப்படி அந்த வேலி பேனி படி படியாக வளர்க்கப்பட்டது, அந்த வேலி எப்படி மேற்பார்வையிட்டனர் என்று எவ்வளவோ தகவல்கள் தருகிறார். 200 பக்கங்கள் கொன்ட இந்த புத்தகம் படிக்கும் ஆர்வத்தை தூன்டுவதாய், வெள்ளய ஆட்சியை பற்றிய பல தகவல் தருவதாய் இருக்கிறது. ஒரு பிரிட்டிஷ்காராய் இருந்தும் வெள்ளையர்கள் செய்த சூழ்ச்சியை அம்பலபடுத்தி இருக்கிறார். அவருக்கு நன்றி சொல்ல நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

No comments:

Post a Comment