Tuesday, June 3, 2014

நியூ யார்க் பயணக் கட்டுரை - 7

மே 25 மதியம் ஒரு மணி அளவில் அமேரிக்கன் நேச்சுரல் அரங்காட்சியகத்திற்கு சென்றோம். நியு யார்க்கில் அருங்காட்சியகங்கள் தான் அதிகமாக இருக்கிறது. அருங்காட்சியகத்தில் நுழைந்த்துமே, முதலில் வானவியல் சம்பத்தப்பட்ட காட்சி பொருட்கள் தான் இருந்தது. பூமி, அதின் அருகே உள்ள கிரகங்கள் அதை பற்றிய தகவல்கள் என நிறைய இருந்ந்தது.அந்த ஒரு சின்ன பகுதியை முழுமாயாய் பார்ப்பது என்றாலே பல மணி நேரம் தேவைப்படும். அதற்கு மேலிருந்த தளத்தில் உலகின் உருவாக்கம் பற்றியும், அதன் வயது மற்றும் எந்த காலத்தில் என்னன்ன மாற்றங்கள் உருவாயிற்று, உயிர்கள் எப்படி உருவாயிற்று என்பதை விவரிக்கும் ஒரு சுருள் படிக்கட்டு டைம் லைன் இருந்தது.

அதன் பின் வேற்று கிரக்கத்தில் பல டன் எடையுன் பூமியில் விழுந்த மிட்டியோராய்ட் கற்களின் பகுதிகளை வைத்திருந்நார்கள். இரும்பு கற்கள். வேற்று கிரகத்தின் உயிர்கள் வாழ்வதற்கு ஆதாரமாய் கிடைத்த ஃபாசில்கள் வைத்திருந்தார்கள். எரிமலைகளை பற்றி, பூமியை பற்றி என்று பல தகவல்கள். இப்படியே பார்த்தால் இந்த அருங்காட்சியகத்தை பார்த்து முடிக்க ஒரு வாரத்திற்கும் மேல் ஆகும். அதனால் நமக்கு எந்த இடம் பார்க்க ஆசை இருக்கிறதோ அதை பார்த்துவிட்டு கிளம்புவது என்று முடிவுக்கு வந்தோம். அதன் படி விளங்குகள், பறவைகளின் தோலில் பஞ்சிட்டு அடைத்து வைத்திருந்தார்கள், அதன் வழியே பார்த்து கொன்டே நகர்ந்தோம். சமுத்திர உலகம் எனும் இடத்தில் கடலுக்குள் இருக்கும் உயிரினங்களை காட்சிப்படுத்தி இருந்தார்கள். அமெரிக்க தாவரங்களை காட்சிப்படுத்தி இருந்தார்கள். அதில் அமெரிக்காவில் இருக்கும் 2000 வருடங்களுக்கு முன்னிருந்தே இன்றும் உயிருடன் இருக்கும் சிக்காயோ மரத்தின் குறுக்கு வெட்டு தோற்றதின் மாதிரியை வைத்திருந்தார்கள். 20 அடி விட்டம் உள்ள வட்டமாக தோன்றியது.

மனித பரினாம வளர்ச்சியை குறித்து ஒரு பகுதி ஒதுக்க பட்டிருந்தது. ஆதி மனிதனின் எலும்பு கூடுகள். அவன் உடற் கூறு விவரங்கள். அவனின் தொழில் நுட்பம் மற்றும் அவனிடம் எப்படி மொழி வளர்ந்து வந்தது என்பதை காட்சி படுத்தி விவரித்திருந்தார்கள்.ஒரு பகுதியில் ஆசிய மக்களை பற்றிய ஒரு பகுதி இருந்தது. ரஷ்ய, சீன, திபத்திய, இந்திய, ஜாப்பானிய நாட்டு மக்களின் கலச்சாரங்கள், அவர்களின் இசை, மதம், முந்தய தொழில்நுட்பம் என பல பொருட்களை காட்சிப்படுத்தி இருந்தார்கள். மதத்தின் வகையில் இந்தியா ஆசியாவிற்கே பெரிய பங்காற்றி இருக்கிறது. புத்தரும், இந்து தெய்வங்களும் பல நாடுகளில் வழிபட பட்டிருக்கிறது.

இன்று நியூ யார்க் சுற்றுலாவின் கடைசி நாள், அதனால் பார்க்கவிட்டு போன இடங்கள் இன்னும் நிரைய இருந்தது. அதனால் ஒரு இரண்டு மணி நேரம் அந்த அருங்காட்சியகத்தில் செலவிட்டு விட்டு வெளியேறினோம். அதற்கு பின் புறம் நியூ யார்க் ஹிஸ்டார்க்கள் சொசைட்டி இருந்தது. அங்கு சென்றோம். அதில் அமெரிக்க புரட்சி போரில் சம்பத்தபட்ட பல பொருட்கள் வைத்திருந்தார்கள். அமெரிக்க சிவில் வாரின் போது பயன் படுத்தப்பட்ட காட்டன் கில்ட் போர்வைகளை பல வைத்திருந்தார்கள். அந்த போர்வைகளில் தேசப்பக்தி உருவகங்களும், தேச கொடியும் வரையப்படிருந்தது. அது மக்களையும் போரில் இருக்கும் ரானுவ வீர்ர்களையும் இனைக்கும் ஒரு பொருளாக இருந்திருக்கிறது. 

1930களில் நியூ யார்க்கில் எடுக்கப்பட்ட புகைபடங்களை காட்சிக்கு வைத்திருந்தார்கள். மேல் தளத்தில் யாரோ ஒரு ஓவியரின் ஓவியங்களை வைத்திருந்தார்கள். அவர் பறவைகளை மட்டுமே வரைந்திருந்தார். அதற்கு மேல் அங்கு வரலாற்று காட்சியகங்கள் எதுவும் இல்லை. அங்கிருந்நு வெளியேரினோம்.

நியூ யார்க் கடலோரத்தில் பல தீவுகளாக இருப்பதால் அதை நீரில் சுற்றி காட்ட பல படகு சவாரிகள் இருக்கிறது. அதனால் படகு சவாரி போவதாக முடிவு செய்து 42வது வீதியில் இருக்கும் படகு துறைக்கு சென்றோம். அந்த வீதியில் எல்லாம் குடியிருப்பு கட்டிடங்கள் பல்லடுக்கு மாடிகளாய் இருந்தது. படகு துறைக்கு செல்லும் போது 5 மணியாகிவிட்டது. கடைசியில் ஒரே ஒரு அதி வேக படகு சவாரி இருந்தது. அதில் சென்றோம். தன்னிரை கிழித்து கொன்டு சென்றது. 4000 குதிரை வேகம் என்று சொன்னார்கள், ஆனால் அவ்வளவு வேகமாக செல்வதாக தெரியவில்லை. நியூ யார்க் கரை முழுக்க படகு துறைகள் இருந்தது. அரை மணி நேர சவாரி முடிந்து திரும்பினோம்.

அங்கிருந்து சப் வே ரயில் மூலமாக ப்ருக்ளின் பாலத்திற்கு சென்றோம். இதுவும் நியூ யார்க் நகரின் ஒரு அடையாள சின்னம். நான்கு நாட்களாய் நியூ யார்க்கில் சுற்றியும் நியூ யார்க்கின் மன்ஹாட்டன் பகுதியை விட்டு இப்போது தான் வேறு பகுதிக்கு வருகிறோம். ஏனெனில் மன்ஹாட்டன் பகுதியில் சுற்றலா தளங்கள் அதிகம், மற்றும் மன்ஹாட்டன் பகுதி வளர்ந்த அளவிற்கு பிற பகுதிகள் வளரவில்லை என்று தான் நினைக்கிறேன். சப் வே ரயிலில் ப்ரூக்ளின் பாலம் அருகே இறங்கி பாலத்திற்கு நடந்தோம் சூரியன் மறைய துவங்கி இருந்தது. பாலத்தின் மேல் மக்கள் பலர் நடந்து கொன்டிருந்தனர். சைக்கிள்களில் பலர் சென்று கொன்டுருந்தனர். பாலத்தில் இரு தளங்கள், கீழ் தளத்தில் கார்கள் ஓடி கொன்டு இருந்தது, மேல் தளத்தில் பாதசாரிகளும், சைக்கிளும்.

ப்ரூக்ளின் பாலம்
பெரிய பாலம். 1883ல் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. இரண்டு மாபெரும் தூன்களின் மேல் பாலம் செல்கிறது. மன்ஹாட்டனையும், ப்ரூக்ளினையும் இனைக்கிறது. பாலத்தை பல இரும்பு கம்பிகளால் தூன்களில் பினைக்கபட்டிருந்தது. தூன்களில் இருந்து விரியும் விலா எழுப்புகள் போல் இருந்தது அந்த கம்பிகள். பாலத்தின் உள்ளிருந்து பார்க்கும் போது ஏதோ பெரிய வலையில் அடைக்கப்பட்டது போலிருந்தது.  அது கட்டப்பட்ட காலத்திற்கு இது பெரும் சாதனை. இப்படிப்பட்ட செயல்களை செய்து காட்டுவது உலக அளவில் அந்நாட்டின் வல்லமையை பறைசாற்றுகிறது. பாலங்களின் விளிம்பு தடுப்பிகள் இரும்புகளால் ஆனது. அதில் சுற்றுலா வருபவர்கள் அவர்கள் பெயரை எழுதி வைத்துவிட்டு சென்றுருந்தார்கள். பாலத்தில் சில இடங்களில் பூட்டை பூட்டி, அந்த பூட்டில் அவர்களின் பெயர்களை எழுதி இருந்தார்கள். ஜோடிகளின் பெயர்களாக தானு இருந்தது. அதற்கு பெயர் காதல் பூட்டு - love lock. நாங்கள் பூட்டு எடுத்து செல்லவில்லை. ப்ருக்ளினில் இருந்து மன்ஹாட்டன் நோக்கி நடக்கும் போது, மன் ஹாட்டன் நகரின் கட்டட வரிசைகள் அழகாக தெரிந்தது. பாலத்தின் கீழு படகுகள் சென்று கொன்டிருந்தது. அனைவரும் புகைபடங்கள் எடுத்து கொன்டனர். விபரிதமாக ஒரு வெள்ளை இளைஞன் பாலத்தின் விளிம்புகளில் ஏறி புகைபடம் எடுத்த கொன்டிருந்தான். பாலத்தை நடந்தே கடந்து மன்ஹாட்டன் வந்தோம். பார்க்க இருந்த கடைசி இடம் எம்பயர் ஸ்டேட் கட்டிடம். அங்கு சென்றோம்.


காதல் பூட்டு

இரவு 9;30 ஆகி இருந்தது. ரயிலில் இருந்து இறங்கி உணவகம் தேடி நடந்து சென்றோம். இரவு நேரங்களில் நியூ யார்க்கின் வீதிகள் குப்பை பைகளாள் நிரம்பி இருக்கிறது. ஒவ்வொரு கடையும் மூடும் நேரத்தில் குப்பைகளை எடுத்து வீதியில் வைத்து கடையை சுத்தம் செய்கிறார்கள். வீதிகளில் நீர் வழிந்தோட குப்பைகளுடன் இருந்ந்து. எம்பயர் ஸ்டேட் அருகே ஒரு உணவகத்தில் சாப்பிட்டோம். எம்பயர் ஸ்டேட்டை சுற்றி இருக்கும் வீதிகள் சுத்தமாக இருந்தது. சாப்பிட்டு வெளிவந்தால் பெரிய வரிசை நின்று கொன்டிருந்தது. மேல சென்று பார்க்க இரண்டு மணி நேரமாகும் என்றார்கள். அதை தவிர்க்க விரைவு டிக்கட்டுகளும் விற்று கொன்டிருந்தனர்.

எம்பயர் ஸ்டேட் பில்டிங் 103 தளங்களுடன் அமேரிக்காவின் நான்காவது உயரமான கட்டிடம், உலக அளவில் 23 வது உயரமான கட்டிடம். 1931ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த கட்டிடம் கட்டப்பட்ட வருடத்தில் இருந்து 40 ஆண்டுகள் உலகின் உயரமான கட்டிடமாக இருந்திருக்கிறது. நியூ யார்க்கின் உயரமான கட்டிடங்களுக்கு அமெரிக்காவின் வரலாற்றில் ஒரு முக்கிய இடம் இருக்கிறது 19ம் நூற்றான்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றான்டின் தொடக்கத்திலும் அமேரிக்காவின் அசாதாரன வளர்ச்சியை இந்த கட்டிடங்கள் குறிக்கிறது. அந்த காலங்களில் இந்த கட்டிடங்களின் தலை சுற்ற வைக்கும் உயரத்தில் தொழிலாளிகள் (Iron workers) எப்படி அநாயாசமாக வேலை செய்தார்கள் என்பது ஆச்சரியத்துக்குரியது.
இரும்பு தொழிலாளிகள்

திருப்பதி தேவஸ்தான வரிசை போல் வளைந்து வளைந்து சென்றது வரிசை. கட்டிடத்தின் உயரமான தளத்திற்கு கூட்டி சென்று அங்கிருந்து நகரத்தை பார்கலாம். அவ்வளவு தான் விஷயம். நேற்றும் இங்கு வந்தோம் ஆனால் மேகத்தினால் காட்சி சுத்தமாக தெரியாது எள்றார்கள். இன்று தெளிவான வானம், இரவு வார இறுதி அதனால் தான் பெரும் கூட்டம். வரிசையில் கால் கடுக்க இரண்டு மணி நேரம் நின்றோம். எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தில் மின் சக்தியை சேமிக்க எவ்வளவு ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள் என்று எழுதிப்போட்டிருந்தார்கள். கட்டிடம் கட்டப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைபடங்கை வைத்திருந்தார்கள். இந்த கட்டிடத்தின் ஒவுவொரு தளமுமு உயரமாகவே இருந்தது. இப்போது கட்டப்படும் பல்லடுக்கு கட்டிடங்களில் தளங்களின் உயரத்தை குறைத்த கட்டுகிறார்கள் போலும்.

87வது மாடியில் இருந்து நகரத்தை பார்த்தோம். நான்கு திசைகளில் இருந்து பார்த்தோம். விமானத்தில் இருந்து பார்ப்பது போல் இருந்தது. நகரத்தின் மேல் மின் மினிகள் போர்வையாக போர்த்த பட்டிருந்தது போல் இருந்தது. நிறைய கட்டிடங்களில் தேவை இல்லாமல் விளக்கு எரிந்து கொன்டிருக்கிறது என்று தோன்றியது.  பல கட்டிடங்களின் சிகரங்களில் சிவப்பு விளக்கும் அதன மேல் நீல விளக்கும் எரிந்யு கொன்டிருந்தது. அமெரிக்க கொடியின் நிறத்தை குறிக்கிறது என்று நினைக்கிறேன். மன் ஹாட்டனை தவிர நியூ யார்க்கின் மற்ற பகுதிகளில் உயர்ந்த கட்டிடங்கள் மிக குறைவாகவே தென்ப்பட்டது.

நியூ யார்க்கில் இன்னும் ரிக் ஷாக்கள் ஓட்டுகிறார்கள். எம்பயர் ஸ்டேட்டில் இருந்த வெளிவந்ததும். ரிக்ஷா நின்றது அதில் ஏரி டைம் ஸ்க்யர் சென்றோம். 1 நிமிடத்திற்கும் 4 டாலர் என்று 9 நிமிடத்திற்கு பனம் கேட்டான் ரிக்ஷாகாரன், அது மிகவும் அதிகம் காரில் வந்தாலே 10 டாலருக்கு வந்திருப்போம் என்று பேரம் பேசி குறைத்தேன். நாளைக்கு ஊருக்கு கிளம்புவதால் நள்ளிரவில் நகரத்தை எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் என்று தான் அங்கு வந்தோம். அந்த நேரத்திலும் டைம் ஸ்கயரில் நல்ல கூட்டம். விளம்பரங்கள் ஓடி கொன்டே இருந்தது. ஒரு ஒன்றரை மணி நேரம் அங்கு உட்கார்ந்திருந்து விட்டு இரவு 2;30 மணி அளவில் விடுதிக்கு திரும்பினோம்.

மே 26, 11 மணி அளவில் காரில் ஊருக்கு கிளம்பினோம். நியூ ஜெரிஸியில் காருக்கு பெட்ரோல் போட்டோம். அமெரிக்காவில் நாம் தான் பெட்ரோல் பங்கில் பம்புகளை இயக்க வேண்டும் ஆனால் நியூ ஜெரிஸியில் இந்தியாவை போல் பெட்ரோல் போட ஊழியர்கள் இருக்கிறார்கள். மொத்தம் 10;30 மணி நேரம் காரை ஓட்ட வேண்டும். நல்ல வெயிலுடன் ஓட்டுவதற்கு இதமாக இருந்தது.வேக அளவை மீராமல், 2 மணி நேரத்திற்கு ஓரிடத்தில் நிறுத்தி ஓட்டி வந்தேன். திரும்பும் போது இயற்கை காட்சிகள் வரும் போது இரிந்தது போல் சிறப்பாக இல்லை. நிறைய பேர் வேக வரம்பை மீறியதால் காவலர்களால் பிடிக்கப்பட்டனர். இந்த முறை டோல் சாலைகள் வழியாக தான் வந்தேன். மொத்தம் 11 டாலர் சுங்கம் கட்டவேண்டி இருந்தது. இரவு 11;30 அளவில் வீட்டுக்கு வந்தோம். இன்னும் புத்துனர்ச்சி இருந்து கொன்டிருந்தது.

No comments:

Post a Comment