Monday, April 21, 2014

இந்து மதமும் அதன் உட்பிரிவுகளும்

இந்து மதம் என்றால் நாம் இன்று பெரும்பாலும் பக்தி விஷயங்களையே சொல்லுகிறோம். இந்து பெரும் கடவுள்கள், சடங்குகள் இவை அனைத்துக்கும் பக்தி சார்ந்த அர்த்ததையே சொல்கிறோம். இந்து மதம் இன்று நாம் அனுகுவது போல் மிக குறுகிய அளவில் ஒற்றைப்படையாக இருந்ததில்லை. அதில் பக்தி, தத்துவம், யோகம் என்று பல தளங்கள் இருக்கிறது.

இதில் பக்தி தளம் கூட இன்று பார்ப்பது போல் ஒற்றைபடையாக இருக்கவில்லை, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு பல் வேறு வழிபாட்டு முறைகள் இருந்திருக்கிறது. சைவம், வைனவம் என்பது இன்றும் கூட பெரும்பாலோருக்கு தெரிந்ததே. சைவம் சிவனை பிரதான தெய்வமாக கொண்ட வழிபாட்டு முறை. வைனவத்துக்கு விஷ்னுவே பிரதான தெய்வம். இந்த இரு தளங்களை கூட இன்று அவ்வளவு கட்டுபாட்டுடன் கடைபிடிக்கும் மக்கள் இல்லை. ஒரு காலத்தில் சைவ மரபை சேர்ந்தவர்கள் சைவ தெய்வங்களை தவிர வேறு தெய்வங்களை வணங்க மாட்டார்கள். அப்படியே வைனவத்திலும். நான் சொல்லும் காலம் அப்பரும், ஞான சபமந்தரும், ஆள்வார்களும் வாழ்ந்த காலம். கால போக்கில் இது கரைந்து மக்களிடையே எல்லா தெய்வங்களும் கலந்து போனது. 


வைனவ மடத்தில் படித்த ஒருவருக்கு சைவ தமிழ் இலக்கியங்கள் பற்றி அறிமுகமே இருக்காது. சைவ பள்ளியில் படித்த உ.வே.ஸ்வாமிநாத ஐயருக்கு சீவக சிந்தாமனியை பற்றி கேள்வியே பட்டிராத காலம் ஒன்று இருந்தது. அதை ஒருவர் சுட்டி காட்டிய பின்னர் தான், அவர் அப்படி பல தமிழ் இலக்கியங்களை தேடி சென்று இருக்கிறார்.இன்று இந்த வேறுபாட்டை அழுத்தமாக கடை பிடிப்பது சில சாதிகளே, வைனவத்தை ஐயங்கார்களும், சைவத்தை சைவ பிள்ளைகளும், நாட்டு கோட்டை செட்டியார்களும். 

இந்த சைவம் வைனவம் மரபுகள் தவிர வேறு மரபுகளும் இருந்தன. சாக்தம், சக்தியே இதன் பிரதான தெய்வம், பெண் தெய்வங்களாளான மரபு. கௌமாரம், முருகனை பிரதான தெய்வமாக கொன்ட மரபு.காணபத்யம், கணபதியை பிரதானமாக கொன்ட மரபு. சூரியனை பிரதான தெய்வமாக கொன்ட மரபு சௌரம். இது போக தாந்திரிகம் என்ற வழிபாட்டு முறை உண்டு, குறியிட்டு வழிபாட்டு முறை. இது சாக்த்தத்தில் பெரும்பங்கு ஆற்றியது. 

இந்த எல்லா மரபுகளும் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இருந்த பழங்குடி வழிபாட்டு முறையிலிருந்து படி படியாக வளர்க்கப்பட்டது. இந்து மதம் தவிர இன்ன பிற மதங்களான சமனம், பெளத்தம் ஆகியவையுடனும் உரையாடி வளர்ந்தது. எட்டாம் நூற்றான்றில் தொடங்கிய பக்தி இயக்கம் சைவத்தையும், வைனவத்தையும் பெருமளவில் வளர்தது. கால போக்கில் பிற மதங்கள் சைவம் மற்றும் வைனவத்தின் உள் இழுக்கப்பட்டன, அந்த பெரு மதங்களில் உள்ளிளுக்கபட்ட தெய்வங்கள் உப தெய்வங்களாகின, சடங்குகளும், சிலை அமைப்புகளும் உள் இழுக்கப்பட்டன. 


இந்த பிரதான மற்றும் உப தெய்வங்கள் எல்லாம் பெரு தெய்வங்கள். இவை போக நாட்டார் தெய்வங்கள் பல உள்ளன. நாட்டார் தெய்வங்கள் உக்கிரமான தெய்வங்கள். அவற்றின் உக்கிரத்தை தனிக்க தான் பல் வேறு சடங்குகளும், பலிகளும். அவை அருள் பாலிக்கும் தெய்வங்கள் அல்ல, பயமுறுத்தும் தெய்வங்கள். அவற்றின் வரலாற்று பாடல்களில் கோழி கறி, ஆட்டு கறி, பன்றி, மாடு, நர பலி, சூலிப் பெண்னை பலியாக கேட்பதே அதற்கு சான்று.  இப்படி எல்லா ஊருக்கும் பல நாட்டார் தெய்வங்கள் உள்ளன. சுடலை மாடன், பன்றி மாடன், கழு மாடன், இசக்கி, நீலி, சொறி முத்து, பாண்டி, அய்யனார், முனிஸ்வரன் என்று பல.


இந்து மதத்தின் ஒரு தளம் பக்தி மரபு என்றால் இன்னோரு தளம் தத்துவம். தத்துவம் அறிவு சார்ந்த தளம். தர்க்கதாலும், வியாக்யானத்தாலும் கட்டமைக்கபட்டது. 'நான் யார்?', 'உலகம் எப்படி உருவாகியது?' போன்ற அடிப்படையான ஆழமான கேள்விகளுக்கு பதில் தருவது அல்லது அது சார்ந்து சிந்திக்க செய்வது. அந்த தத்துவ தளத்தில் பல வகை உண்டு. வேதாந்தம், பூர்வ மிமாம்சம், சாங்கியம், யோகம், வைசேஷிகம், நியாயம். வேதாந்தமும், பூர்வ மிமாம்சமும் வைதிக மரபுகள். பிற நான்கும் அவைதிக மரபில் அடங்கும். சார்வாகம் என்னும் கடவுளை மறுக்கும் நாத்திக மரபும் இந்து மதத்தில் அடக்கம்.

இது போக இந்து அல்லாத மதங்களான சமனம், பெளத்தம், ஆசிவகம் மற்றும் மேல சொன்ன சார்வாகமும் நாத்திக மதங்களாகும். இந்த ஆத்திக, நாத்திக தத்துவ தளங்கள் அனைத்துமே நடைமுறையில் முக்தியை உணர்வதற்கு யோக முறை பின்பற்றப்பட்டது.

இந்து மதம் பல மரபுகள், வழிப்பாட்டு முறைகளுடன் வளர்ந்து அவை அனைத்தையும் ஒருங்கினைத்து தனக்குள் அடக்கி கொன்டது. அதில் முக்தி பெருவதற்கு ஒருவன் எந்த வழியையும் தேர்ந்து எடுக்கலாம், அல்லது அவனே ஒரு புது மார்க்கத்தை கண்டடையளாம்.

இத்தனை பன்முக தன்மையுடன் இருந்த இந்து மதத்தை பற்றி இன்று மிக எளிமையான புரிதலே பெரும்பாலான இந்துகளுக்கு இருக்கின்றது. இந்த அறிவு தளங்கள் எல்லாம் கால காலமாக வளர்ச்சி பெற்றே வந்திருக்கிறது. அதன் வளர்ச்சி இப்போது பல நூற்றாண்டுகளுக்கு முன்னே முடங்கி போய்விட்டது. இப்படியே போனால் இந்ந தத்துவ மரபுகளில் இருக்கும் நம் முன்னோரின் ஞானத்தையும் அதை சார்ந்து நாம் மாற்றி அமைக்க வேண்டிய திருத்தங்களையும் நம் வருங்கால தலைமுறைக்கு இல்லாமலாக்கிவிடுவோம்.

No comments:

Post a Comment