Thursday, April 10, 2014

ஒரு புளிய மரத்தின் கதை - வாசிப்பு அனுபவம் - 1

"ஒரு புளிய மரத்தின் கதை" ஒரு தமிழ் புனைவு, 1960களில்  முன்னொடி எழுத்தாளரான சுந்தர ராமசாமி எழுதப்பட்ட நாவல். இந்நாவல்  பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஹீப்ருவில் மொழி பெயர்க்கப்பட்ட இந்திய மொழி ஒன்றில் எழுதப்பட்ட முதல் நூல் இது.

காலத்தால் ஏற்படும் மாற்றங்களை பார்த்து கொன்டிருக்கும் ஒரு புளிய மரத்தின் கதை இது. இரண்டு தலைமுறையின் மாற்றங்களை கவனித்து கொன்டிருக்கும் புளிய மரத்தின் கதை இது. காரி உமிழ்ந்த போதிலும் நம்மை சலைக்காமல் தாங்கி கொன்டிருக்கும் பூமி மாதாவின் ஒரு ரோம காலாய் முளைத்து அதே பண்பை வெளிக்காட்டும் ஒரு புளிய மரத்தின் கதை. உலகெங்கும் எத்தனையோ மரங்களுக்கு நடந்தேரும் இந்த கதையை பிரதிநிதியாக வைத்து சொல்லப்பட்ட ஒரு புளி்ய மரத்தின் கதை.

கதையின் ஆரம்பத்தில் புளிய மரத்தின் பூர்வீகத்தை பற்றி கூறும் போதே புளிய மரம் பல பழைய ஞாபகங்களை என்னுள் தூன்டியது. புளிய குளம் என்ற குளத்தில் தீவு போன்ற ஒரு திட்டின் மேல் எழுந்திருந்தது இந்த புளிய மரம். இது கிட்டத்தட்ட நான் கல்லூரி காலங்களில் சில நேரம் சென்றமரும் மரங்களை ஞாபகபடுத்தியது. உடுமலைப்பேட்டை ஒரு டவுன். அங்கிருந்தி இரண்டு கிலோமீட்டர் ஊருக்கு வெளியே சென்றால் விவசாய நிலங்கள். அதற்னிடையே ஒரு குளம், 'ஒட்டுக்குளம்'. குளத்தை ஒட்டி ஒரு 20 அடி உயர மேடான மன்பாதை . அதில் சைக்கிளில் செல்லும் போது தொலைவில் இரு கருவேல மரம். பச்சை தளத்தில் கருத்த மரமாய், ஊசி இலைகளுடன் தன்னிருக்கு நடுவில் கணவுலகம் போல இருந்தது. இரண்டு மூன்று முறை போகும் போதும் வரும் போதும் அதை பார்த்த படியே சென்று வந்தேன். சென்றடைய முடியாத இடம் போலவே தெரிந்தது. ஒரு நாள் சென்று தான் பார்ப்போமே என்று தோன்றியது. குளத்தின் மறுகரையின் கீழே ஒரு அகல மண்பாதை மேடும் பள்ளமுமாக குளத்தை நோக்கி நுழைந்தது. முதலில் இரு கூரை வீடுகள், அதை மரத்தாலான பட்டியில் அடைக்கபட்ட பண்ணி மந்தை. அதிலிருந்து இரண்டு நாய்கள் துரத்தி கொன்டு வந்தது. வேகமாக சைக்கிளை உருட்டி கொன்டு அந்த மரங்களை நோக்கி சென்றேன். அந்த மரங்கள் இருந்த இடம் ஒரு தீபகற்பம். நடுவில் புல்வெளியில் இந்த மரங்கள். ஊருக்கு வெளியே அனுகமுடியாத இருக்கும் இதை போன்ற மரங்கள் கொடுக்கும் அனுபவங்களே வித்தியாசமானது. கண்னகளுக்கு குளிர்ச்சி, மனதிற்கு அமைதி, எவ்வளவு கத்தினாலும் யாருமே கேட்க முடியாத தனிமை என்று அனைவருக்கும் கிடைத்திடாது. ஆனால் இதையும் தான்டி அங்கு கிடைத்த விநோதமான காட்சிகள் திடுக்கிடவே வைத்தது. தலை அறுக்கப்பட்டு முன்டமாய் குளியில் தூக்கி எரியப்பட்ட ஒரு நாய். ஓரினசேர்க்கையரின் அனுகல், அந்த மரங்களில் கட்டப்பட்டிருந்த தாலி கயிறு.

இதே போன்று சென்ற நூற்றான்டில் இருந்த மரம் தான் அந்த புளிய மரம். கால போக்கில் அதை சுற்றி இருந்த குளம் ரோடாகிறது, புளியமரம் பேருந்து நிறுத்துமிடம் ஆகிறது, அங்கே பல கடைகள் தோன்றுகின்றன மரத்தை சுற்றி பல் வேறு மாற்றங்கள். இறுதியில் அந்த மரம் அற்ப மணித சுய நலத்தால் வீழ்த்தபடுகிறது. இந்த புளிய மரத்தாலேயே புளிய குளம் என்று பெயர் பெற்ற ஊர் படிபடியாக வளரும் வளர்ச்சியும், அங்குள்ள வியாபாரிகளின் போட்டியினாலும் பொறாமையானாலும் உன்டாகும் விளைவுகளே இக்கதை. ஆசிரியர், தன்னயே ஒரு பாத்திரமாய் வைத்து கதை சொல்லி செல்கிறார், கதையின் மூன்றில் ஒரு பங்கு ஊரை பற்றியும் ஆசான் என்பவர் சொல்லும் கதைகளிலுமே நகர்கிறது. கிராமத்தை மையமாக வைத்து உலகலாவிய பல விஷயங்களை உனர்த்ததுகிறது. அதன் பிறகு பெரிய பரப்பில் பேசி கொன்டிருந்த கதை சுருங்கி ஊரின் நடுவில் இருக்கும் கடை தெருவும் , வியாபாரிகளும், முனுசிபாலிடியையும் சுற்றி வருகிறது. தொடக்கத்தில் இருந்து இறுதி வரை புளிய மரம் கதையின் முதுகெழும்பாய் வந்து கொன்டிருக்கிறது.

ஆசான் கதையில் ஒரு முக்கிய கதா பாத்திரம். பழைய மனிதர். எண்பது வயதிலும் திடகாத்திரமான ஆள், கற்பனை நிறைந்த ஒரு கதை சொல்லி, எவ்வளவு கதை சொன்னாலும் தன்னை பற்றிய வீஷயங்களை வெளி சொல்லாத இறுக்கமான மணிதர். அவரே புளிய மரத்தின் கதையை ஆசிரியருக்கும் அவர் நன்பர்களுக்கும் சொல்கிறார். தூர்வாரப்படாமல் நாறும் குளமாய் இருந்த இடம் திருவிதாங்குர் மகாராஜாவால் எப்படி ஒரே வாரத்தில் ராஸ்தாவக மாறுகிறது என்று சொல்கிறார். புளிய மரத்தில் ஒருத்தி தூக்கு மாட்டி செத்து போன கதையை சொல்கிறார். அதனால் கோபமடைந்த அவள் மாமனான பூசாரி மரத்தை வெட்ட வரும் நேரத்தில் யுக்தியாக மரத்தை காத்த கதையை பெருமையுடன் சொல்கிறார்.

ஆசிரியர் வேலைக்காக வெளியுர் சென்று சில வருடங்கள் கழித்து வரும் போது ஆசானை ஊரில் கானவில்லை. அவர் என்ன ஆனார் என்பதற்கு பல விதமான கதைகள் இருந்தது. அதே சமயத்தில் ஊர் பல மாற்றங்களை அடைகிறது. அந்த காற்றாடி தோப்பு அழித்து ஒழிக்கப்பட்டு ஒரு பூங்கா உருவாக்கப்படுகிறது. மரங்கள் வெட்டப்பட்டு க்ரோடன்ஸ் செடிகள் நடப்படுகிறது. அதை பார்த்து கொன்டு இருந்த ஒர் கிழவர், கிட்டத்தட்ட ஆசான் போல மனநிலை உடையவர், அருகில் இருந்த இளைஞரை பார்த்து கேட்கிறார், 'எதுக்கு மரத்த வெட்ரானுவ?' இளைஞர் சொல்கிறார் 'மரத்த வெட்டிட்டு அழகான செடி நடத்தான்', 'ஏன் மரம் அழகில்லயோ?', 'இல்ல, செடி தான் அழகு', 'அப்ப அந்த செடி வளந்து மரமாகதோ?' இளைஞகன் கிழவரை முறைத்து விட்டு 'செடிய மரமாகாம வெட்டி வெட்டி உடுவாங்க' என்று கடுப்புடன் சொல்லி செல்கிறான். இது தான் இந்த இரு தலைமுறைக்கும் உள்ள வித்யாசம். கிழவரின் தலைமுறை இயற்கையை தங்களை போலவே கருதியது. இயர்கையை இயர்கையாகவே மிளிர செயத்து அதில் இருந்து இயற்கையாய் கிடைக்கும் பலன்களில் திருப்தி அடைந்தது. ஆனால் அந்த இளைஞகனின் தலைமுறை, கிட்டத்தட்ட நம் பெற்றொரின் காலத்தை சேர்ந்தவர்கள், அந்த தலைமுறைக்கு இயற்கையை சுய நலத்தையே பிரதானமாக கொன்டு அனுகப்பட வேண்டிய ஒரு பொருளாக மாறிவிட்டது. அந்த தலைமுறைக்கு இயற்கை ஒரு அழகு பொருளாகவும், தன் தேவைக்கு உபயோகித்து கொள்ளும் ஒரு மூல பொருளாகவுமே தெரிகிறது. அதற்கு இயற்கையை புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லை, ஸ்விட்சை போட்டால் ஃபேன் ஓடும் போது அதற்கு மரத்தின் அருமை புரியவில்லை, குழாயை திருகினால் தன்னிர் வரும் போது குளங்களின் தேவை தெரிவதில்லை. மரங்களையும், அதன் மேல் அமரும் பறவைகளையும், அது வீசும் தென்றலையும் அனுபவிக்க தெரியாது. அதன் கண்னுக்கு செயற்கையாய் செய்யப்படும் அழகு தான் அழகாய் தெரிகிறது. அதுவும் நம் ஊர் செடிகளாலான மல்லி, முல்லை போன்ற செடிகள் அழகாய் தெரியாது. வெளிநாட்டு செடிதான் அழகாய் தெரியும். அதை பரமரிக்க இரண்டு ஆட்களை போட்டு பேனி பாதுகாப்போம். இலை அழகில் ஒரு பலனும் இருக்காது. பூக்காது, காய்காது, நிழல் தராது, தென்றல் வீசாது. ஆனால் அதை தான் வெள்ளை காரன் ரசிக்கிறான் அதனால் நாமும் ரசித்தாக வேண்டும், அதுவே நவநாகரிகம், அதுவே அறிவு பூர்வமான ரசனை. அன்று முதல் இன்று வரை இதே முட்டாள் தனம் தான். மணிதனை மையமாக வைத்து, மற்ற அனைத்து வளங்களும் மனிதனின் தேவைக்காகவே படைக்கப்பட்டிருக்கிறது என்பது மேற்கத்திய சிந்தனை. காலனிய காலத்தின் ஆரம்பத்தில் ஒரு கப்பல் செய்ய 2000 மரங்கள் தேவைப்பட்டிருக்கிறது. உலகம் முழுதும் சென்று காலனி ஆதிக்கம் புரிந்த அந்த ஐரோப்பியர்கள் எத்தனை மரங்களை அழித்து ஒழித்திருப்பார்கள்? ஆனால் கீழை சிந்தனைகள் இயற்கையோடு ஒன்றி வாழவே முயன்றிருக்கிறது. தேவைகேற்ப இயற்கையிடம் எடுத்திருக்கிறதே தவிர பேராசையால் அதை அழித்தொழிக்கவில்லை. ஆனால் இந்த காலனி ஆதிக்கத்தால் நமது பன்பாட்டின் பல்வேறு விழுமியங்கள் நம்மிடம் இருந்து நழுவி சென்றுவிட்டது. 

No comments:

Post a Comment