Wednesday, November 18, 2015

சித்த மருத்துவம் சில நூல்களும் அறுவை சிகிச்சையும்

அங்காதிபாதம் என்று நூல் பரராசசேகரம் என்ற சித்த மருத்துவ நூல் தொகுப்பின் ஒரு பகுதியாக சொல்லப்படுகிறது. அங்காதிபாதம் என்றால் Anatomy. ஆனால் இந்த அங்காதிபாதம் நூலில் பாக்களில் உடற்பாகங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. இது மேலை நாட்டில் சென்ற நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட மிக விரிவான உடற்கூறு புத்தகங்களுடன் ஒப்பிட முடியாது. 

ரராசசேகரம் என்பது 14 - 16ம் நூற்றாண்டு காலத்தில் இலங்கை பரராசசேகரம் மன்னனால் எழுதப்பட்டது என்று கூறப்படுகிறது.

பரராசசேகரம் என்ற நூல் இணையத்தில் என் தேடலுக்கு கிடைக்கவில்லை. ஆனால் ’ஈழத்துச் சித்த மருத்துவ நூல்கள் - ஓர் அறிமுகம்' என்ற நூல் பரராசசேகரம் உட்பட பல நூல்களை அறிமுகப்படுகிறது.

இந்த அறிமுக நூலில் பக்கம் 38ல் அங்காதிபாதம் பற்றி விளக்கப்படுகிறது. பக்கம் 62ல் சாமூவேல் கிறீன் அவர்களின் அங்காதிபாதம் பற்றியும் விளக்கப்பட்டிருக்கிறது.


அறுவைசிகச்சை குறித்து:
 
இது சித்த மருத்துவத்தில் அரக்க வைத்தியம் என்று கூறப்படுகிறது. இதில் பல முறைகள் பிரயோகிக்கப்படுகிறது. அறுவை, கீரல், சுடல், அட்டைவிடல் போன்றவை.


பரராசசேகரத்தின் ஐந்தாம் பாகம் மட்டும் இணையத்தில் கிடைக்கிறது. முற்றிலும் செய்யுள் வடிவில் இருக்கிறது. அதில் சந்திர விதி என்ற பகுதியில் 26 வகை கருவிகள் குறிப்பிடப்படுகிறது.

மண்டலாக்கிரம், விருத்தி, உற்பலம், சூசி, குடோரி, முத்தரி, கத்தரி, குறும்பிவாங்கி, கபத்திரம், பணபத்திரம், கரபந்திரம்,விண்டகண்ணி, சாரி போன்ற கருவிகள் இதில் அடங்கும்.


ஆனால் சுஷ்ருத சம்ஹிதையின் இந்த ஆங்கில மொழிபெயர்ப்பில் அறுவை சிகிச்சை முறைகளை பற்றி விரிவாகவே விளக்கப்படுகிறது.

https://archive.org/details/englishtranslati01susruoft 

No comments:

Post a Comment