Monday, April 27, 2015

அம்பேத்காரின் "இந்து மதத்தின் புதிர்" - எதிர்வினை 2

அம்பேத்காரின் கேள்விக்கு எதிர்வினையாக அவர் எதை வைத்து மதம் என்ற ஒன்றை வரையரை செய்கிறார் என்று கேட்கலாம். அவர் பிற மதங்களிடம் ஓப்பீடு செய்தே இந்து மதத்தின் மீது கேள்வி எழுப்புகிறார். அதற்கு அந்தந்த மதங்களில் அவர் குறிப்பிடும் அம்சம் எப்படி நிலையின்மை பெற்றிருக்கிறது என்று சுட்டிக்காட்டுவதே போதும். இருந்தாலும் இந்த கேள்வியின் வழியாக நாம் உன்மையிலேயே இந்து மதம் இத்தனை பிரிவுகளையும் தன்னில் அடக்கி எப்படி இயங்குகிறது என்று பார்க்க வேண்டும்.

இந்து மதம் ஒரு தொகுப்பு தன்மை உடையதாக உள்ளது. அந்த தன்மையே பிற மதங்களிடமிருந்து இதை பிரித்துக்காட்டுகிறது. இந்து மதத்தை ஒரு தொகுப்பு மதம் என்று கூறலாம். இந்த தொகுப்பில் இருக்கும் ஒவ்வொரு மதமும் அதனதன் பிரிவுகளுக்குள் அவர்களுக்கு ஏற்றப்படி நம்பிக்கையையும் சடங்குகளையும் நடத்தி கொள்ள சுதந்திரம் அளிக்கிறது. இந்த தன்மையினாலேயே தனிப்பட்ட முறையில் இந்து மக்கள் இந்து மதத்தில்லாத கடவுள்களையும் வணங்க தயங்குவதில்லை. இதை அம்பேத்காரும் சுட்டிக்காட்டுகிறார். நானும் என் வீட்டில் பார்த்துதான். சர்ச்சில் ஏசுவை, மாதாவை வணங்குவதற்கு என் அம்மா தயங்கியதில்லை. நோயுற்றால் மசூதீயின் எதிரிருக்கும் ஒரு முஸ்லிம் முதியவரிடம் தான் என்னை மந்திரிக்க எடுத்து செல்வாள்.

இப்படிபட்ட தொகுப்பு மதம் எப்படி தொகுக்கப்பட்டது எதன் அடிப்படையில் தொகுக்கப்பட்டது? இந்த கேள்விக்கு பதில் சொல்ல போனால் அரசர்களுக்கு ஏன் மதமும் அதன் குருக்களும் முக்கியமாக இருந்தார்கள் என்று சொல்லிவிட முடியும். இன்றும் இந்த விடை உலகிற்கு பொருந்தும்.

இந்தியா என்பது பல குலங்களாக பிரிந்து பிரிந்து பல்லாயிரம் வருடங்களுக்கு முன் இருந்தது. அது இயற்கையாக மனித சமூக பரினாமத்தில் அவன் சமூகமாக வாழ ஆரம்பித்திருந்த காலம். இந்த சமூக வளர்ச்சியின் அடுத்தக்கட்டம் என்பது. குல குழுவாக இணைக்கப்பட்டு ஒரு அரசை, அரசாட்சியை நிறுவுவது. இப்படி சிறு குல குழுக்களாக இருக்கும் போது ஒவ்வொரு குலத்திற்கும் அதற்குரிய வழிப்பாட்டு முறை மற்றும் தெய்வங்கள் இருந்தது. ஏதோ ஒரு தருணத்தில் ஒரு சில குலங்கள் இதில் வளர்ச்சி பெற்று வலிமை பெற ஆரம்பிக்கிறது. அவை பிற குலங்களை அடக்கி ஆக்கிரமித்து அங்கு ஒரு சிற்றரசை நிறுவுகிறது.

இப்படிப்பட்ட சிற்றரசுகள் தங்களை பேரரசுகளாக வளர்த்து கொள்வதற்கு மதம் ஒரு கருவியாக இருந்தது. இந்த மதம் எனும் கருவியை இயக்க தெரிந்தவர்கள் மத குருக்கள், மத துறவிகள். இந்து மதத்தில் இவர்கள் வைதீகர்கள் - பிரமானர்கள். ஒரு அரசு தன்னோடு இணைக்க நினைக்கும் ஒரு தனி குலத்தை  அனுகுவதற்கு அவன் முதலில் எடுக்கும் ஒரு முயற்சி ஒரு வைதிகரையோ அல்லது துறவியையோ அந்த குலத்திடம் அனுப்புவது. அந்த வைதீகர் அந்த குலத்திடம் நன்மதிப்பு பெற்று அந்த குலம் அவரை ஒரு துறவியாக அல்லது குருவாக ஏற்று கொள்ளும் பொழுது அந்த வைதீகர் அவர்களது கடவுளை அந்த அரசனின் மதமான இந்து மதத்துடன் இணைப்பார். அந்த குல மக்கள் வணங்கி வந்த தெய்வம் இந்து மதத்தில் ஒரு கடவுளாக மாற்றப்படும்.

இப்படியாக அந்த குலம் முதலில் இந்து மதத்தில் இணையும். அதன் பிறகு இந்து மத ஆதரவோடு ஆட்சி நடத்தும் மன்னனுடன் இணையும். இப்படி தான் பேரரசுகள் உருவாகி வந்தது. இப்படி ஒரு அரசுடன் இணையாத குலங்களை தான் நாம் இன்று பழங்குடியினர் என்றும் பட்டியலிடப்பட்ட குலங்கள் என்றும் கூறுகிறோம், அவர்கள் வாழ்க்கை மேம்பட அரசு சலுகைகளை அளிக்கிறது. ஆகவே குலங்கள் அரசிடம் சேர்வது இரண்டு தரப்புக்குமே அவசியமான ஒன்று. அதை வன்முறை இன்று நடத்த மதம் ஒரு கருவியாகும். இந்த காரணத்தால் தான் இந்து மதத்தில் இத்தனை விதமான கடவுள்கள் வழிப்பாட்டு முறைகள்.

இப்படி இந்து மதம் வளர்ந்திருந்தாலும் இதை காலத்தால் சிதறிவிடாமல் கட்டி இறுத்தியது எது. இவைகளின் மையப்புள்ளி எது. இதுவே அம்பேத்காரின் முக்கியமான கேள்வி. இதற்கு பதில் இந்து மதத்தை மேலோட்டமாக பார்த்தால் கிடைக்காது.

எந்த ஒரு மதத்திற்க்குமே அதில் இருவகை தளங்கள் இருக்கும் என்று சொல்லலாம். ஒன்று அதன் வழிப்பாடு மற்றும் சடங்குள் சார்ந்து ஒரு தளம். இது எந்த ஒரு எளிய மனிதனுக்கும் புரிய கூடியதாய், மிகவும் அத்தியாவசியமனதாய் இருக்கும். இன்னொரு தளம், அந்த மதத்தின் தத்துவ சார்ந்தது.  இந்த மதத்தின் மைய புள்ளி அதன் சடங்குகளிலும் வழிப்பாட்டு முறைகளிலும் இல்லை, அது தத்துவ தளத்திலு இருக்கிறது.

இந்த மதத்தின் தத்துவ தளம் என்பது பல நூற்றாண்டுகளாக வளர்த்தெடுக்கப்பட்டது. தொடர்ந்து பிற மதங்களான் பௌத்தம் சமஞம் ஆகியவைகளுடன் விவாதித்து வளர்ந்து வந்தது. இந்த தத்துவ தளத்தின் தொடக்கம் வேதங்களிலிருந்தே ஆரம்பமாகிறது. பிறகு அது வேதாந்தமாக வளர்ச்சி பெறுகிறது. அதிலிருந்து அத்வைதம் த்வைதம் போன்ற பல வேதாந்த தளங்கள் உருவாகி வந்திருக்கிறது.

இன்று நாம் காணும் எந்த இந்து பிரிவுக்குள்ளும் அதன் புரணங்களிலும் இந்த தத்துவங்களின் ஆதிக்கம் இல்லாமல் இருக்காது. இன்று மதங்கள் முன்பு ஆறு பிரிவுகளாக இருந்தது. சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணப்பத்யம், சௌர்யம். இது காலபோக்கில் ஒன்றுடன் ஒன்று இணைந்து இன்று சைவமும் வைணவமும் நம்மிடையே இருக்கிறது ஓரளவு சாக்தமும்.

இன்று நம்மிடையே இருக்கும் இந்த சைவம் வைணவம் போன்ற பெருமதங்களில் இந்த தத்துவங்களின் கருதுகோள்கள் வலுவாக ஊடுருவியிருக்கிறது. அந்த தெய்வங்கள் இந்த தத்துவங்களை கொண்டு விளக்கப்பட்டிருக்கிறது. 'மகமாயி' என்று நாம் சொல்வதில் மாயி என்பது மாயை என்ற வேதாந்த சொல்லாகும்.
'என்ன தவம் செய்தனை யசோதா எங்கும் நிறை பரப்பிரம்மம் அம்மா என்றழைக்க' என்ற பாடலில் வரும் பிரம்மம் என்ற வார்த்தை வேதாந்தாம் கூறும் முழுமுதல் நிலையாகும். சைவ சித்தாந்தத்தில் கூறப்படும் மும்மலங்களான ஆணவம், கன்ம்ம், மாயை எனப்படுவது அகங்காரம், கர்மா, மாயை என்ற வேதாந்த கருதுகோள்களாகும்.

இப்படி இன்று இந்து மதமானது அதன் தத்துவ தளத்தின் மூலம் சடங்கு மற்றும் வழிப்பாட்டு தளத்தில் இருக்கும் பிரிவுகளை வலுவாக பினைத்து வைத்திருக்கிறது. அம்பேத்கார் தளுவிய புத்த மதமே கூட வேதாந்தத்திலிருந்து எடுத்து கொண்டு மேலே வளர்ந்த தத்துவம் மதம். புத்த தத்துவங்களிலுருந்து எடுத்துகொண்டு இந்து மதத்தில் வளர்ந்து அத்வைதம். இப்படி பல நூறு ஆண்டுகளாக அறிவான விவாதங்களாலும் அஹிம்ஸை வழிகளாலும் வளர்ந்து வந்தது இந்து மதம். இதுவே இந்தியாவில் பிறந்த மற்ற அவைதிக மதங்களான புத்த மதத்திற்கும், சமன மதத்திற்கும் பொருந்தும். கிறித்துவம், இஸ்லாம் போன்ற ஆப்ரஹாமிய மதங்கள் இங்கு கற்றுகொள்வதற்கு நிறையவே உள்ளது.

2 comments: