தமிழில் நான் விரல்விட்டு எண்னக்கூடிய அளவே புத்தகம் படித்திருப்பேன். ஆங்கிலத்தில் அதை விட சில மடங்கு அதிகமாக வாசித்திருப்பேன். மொத்தத்தில் நான் வாசித்தவைகளில் வணிக இலக்கியமே அதிகம். கடந்த ஓராண்டுக்கும் குறைவான காலமாக தான் நான் தமிழ் இலக்கியம் படித்து வருகிறேன். அதாவது வணிக இலக்கியம் சாராத இலக்கியம். கவிதை, சிறுகதை, புனை கதைகள் என்று வாசிப்பு வளர்ந்த்து. இந்த அளவில் எனது இலக்கிய புரிதலையே இங்கு பதிவு செய்கிறேன்.
இலக்கிய வாசிப்பு வெறும் கதையை மட்டும் வாசித்து செல்லும் வாசிப்பாக, பரப்பரபை மட்டும் குறிக்கோளாக கொள்ளாமல், மிக விரிவாக, அதிக தகவல்களுடன் கதாபாததிரங்களையும், கதையின் களத்தையும் சித்தரிக்கிறது. ஒவ்வொரு பக்கத்துக்கும் திருப்பு முனைகளும், உச்சத்தருனங்களும் இல்லாமல் மிகச்சில உச்ச தருனங்களையே கொன்டு கதை நகர்கிறது. மேலோட்டமாக படித்தால் கதாபாத்திரங்களின் அன்றாட வாழ்கையில் நடக்கும் சம்வங்களையே முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டவை போல தெரியுகிறது. அப்படி என்றால் இந்த இலக்கிய படைப்பகள் ஏன் பெரிதாக கருதப்படுகிறது? வாசகனுக்கு இது என்ன அளிக்கிறது?
இலக்கியத்தை வெறுமே படித்து செல்வது மட்டும் வாசகனுக்கு வேலையல்ல. எழுத்தாளர் என்ன சொல்ல வருகிறார் என்பதையும் தொடர்ந்து புரிந்து கொள்ள முயற்சி செய்து கொன்டே வர வேண்டும்.வணிக இலக்கியங்களில் வருவது போல் சொல்முறை அப்பட்மாக விஷயங்களை கான்பிப்பதில்லை. இலக்கியம் அர்த்தங்களை அடைவதற்கு வாசகனின் கற்பனையை தேவையாக்குகிறது. இலக்கியம் அர்த்ததினால் நகராமல் அர்த்த மயக்கங்களால் (ambiguity) நகர்கிறது. கொடுக்கபட்ட தகவல்களை வைத்து வாசகன் சிந்தித்தே அர்த்தங்களை அடைய முடியும். இதனாலேயே இலக்கியம் அதிக முக்கியத்துவம் அடைகிறது. அது வாசகணை சிந்திக்க தூன்டுகிறது. ஒவ்வொரு வாசகனும் வாசித்து, சிந்தித்து அவன் கற்பனை, அறிவு பின்புலத்திற்கு ஏற்றார் போல் அர்த்தப்படுத்தி கொள்வான். நம் முன் நிகழும் உலகம் கூட இலக்கியம் போல தான், நாமே அர்த்தப்படுத்தி கொள்கிறோம். யாரும் வந்து இன்னார் இப்படி என்று நமக்கு சொல்வதில்லை. நாமே தான் ஒவ்வொருவரின் நடவடிக்கையை பார்த்து அவர்களை பற்றிய ஒரு பிம்பத்தை உருவாக்கி கொள்கின்றோம். இலக்கியத்தை தெடர்ந்து வாசிப்பதின் மூலம் உலகத்தை நாம் பார்க்கும் பார்வை தொடர்ந்து மெருகேறி கொன்டே போகிறது. தொடர்ந்து அது நமக்கு அனுபவங்களை தந்து கொன்டே இருக்கிறது அதன் மூலம் வாசகன் முதிர்ந்து கொன்டே இருக்கிறான்.
அதே இலக்கியத்தின் விமர்சனங்களை வாசிப்பதின் மூலமும், அதை வாசித்த மற்றவரோடு கலந்துரையாடுவதின் மூலமும் நாம் அதே கதையின் மற்ற பரிமானங்களையும் புரிந்து கொள்ளளாம். ஒரே விஷயத்தை மற்றவர்கள் எப்படி சிந்தித்து உள்வாங்கியுள்ளார்கள் என்று ஆராயலாம். இது எல்லாமே வாசகனின் பார்வையை விரித்துக்கொன்டே போகும். கதைகளில் விளக்கப்படும் எந்த ஒரு விஷயமுமே ஆசிருயரின் பார்வையில் கொடுக்கப்பட்டிருப்பதால், நாம் இன்னொருவரின் புலன்கள் வழியாக ஒரு உலகை அறிய முடிகிறது. அதை பொறுத்து வாசகனின் அவதானிப்பு வளர்ச்சி அடையளாம். மேலும் ஒரு புனைவை படிக்கும் போது அதில் ஏராளமான வரலாறு, அறிவியல், இடம் சார்ந்த தகவல்கள் கிடைக்கிறது, போகாத இடத்துக்கும், காலத்துக்கும் கற்பனையிலே பறந்து செல்ல முடிகிறது. இந்த அனைத்து பண்புகளுமே மானுட இனத்திற்கு மிக அத்தியாவசியமான ஒன்று. அப்படி பார்க்கையில் ஒவ்வொருவருக்கும் வாசிப்பு பழக்கம் குறைந்த அளவிளாது தொடர்ந்து இருக்க வேண்டும். ஆனால் அது இன்று குறைந்து கொன்டே வருவது மிகவும் வருந்த தக்கது.
No comments:
Post a Comment