Wednesday, December 31, 2014

போர் கருவிகளும் மிருகங்களும்

guided missile system பற்றி தான் யோசித்து கொண்டிருந்தேன். அந்த காலத்தில் இதை எப்படி செய்திருக்க முடியும்?

அம்புகளில் மூலம் செய்திருக்க முடியாது. ஆனால் பறவைகளை எரி குண்டு வீச பழக்கப்படுத்தி இருக்கலாம்.

கழுகுகளை எதிரிகளின் கொடிகளுக்கு பழக்கி, அவர்களின் தேரின் மேல் விழுந்தால் வெடிக்கும் எரி குண்டை உதிர்குமாறு பழக்கப்படுத்தி இருக்கலாம். கழுகுகள் நல்ல உயரம் பறக்கும், பார்வையும் கூர்மையானது.

துருபத போர் படித்து கொண்டிருந்த போது தோன்றியது, பீமன் சங்கிலியில் கதை கட்டி சுழற்றுவது போல். தேரின் உச்சியில் நீளமான சங்கிலியால் கதையை கட்டி சுழற்றினால் காலாட் படைகளை பந்தாடாலாம்.

இப்படி கற்பனையை விரிய செய்கிறது வெண்முரசின் போர் விவரனைகள். இதுவரை எந்த சினிமாவிலும், கதையிலும் பார்த்திடாத அளவுக்கு போர்கள் நுணுக்கமாக சொல்ல படுகிறது.

மேலே சொன்னதெல்லாம் ஏற்கனவே முயற்சி செய்திருப்பார்களே என்று தேடி பார்த்தேன். மனிதர்கள் எதையும் விட்டு வைப்பதில்லை.

புறா இயக்கும் ஏவுகனை  - http://en.wikipedia.org/wiki/Project_Pigeon
வவ்வால் வெடிகுண்டு - http://en.wikipedia.org/wiki/Bat_bomb
ராணுவ மிருகங்கள் - http://en.wikipedia.org/wiki/Military_animal

ஹரீஷ்

வெண்முரசு வாசகர் விவாத தளத்திலிருந்து

No comments:

Post a Comment