Showing posts with label மொழி. Show all posts
Showing posts with label மொழி. Show all posts

Sunday, December 27, 2015

சங்க இலக்கியத் தாவரங்கள்

கவிதையில் கூறப்படும் உவமைகளின் இயல்புகளை வைத்துதான் அந்த கவிதையின் அனுபவத்தை நாம் அடைய முடியும் என்பது நான் சமீபமாக அறிந்து கொண்டது. உதாரணத்துக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள சங்க கவிதையில் குவளை மலரையும் அதன் இயல்புகளும் ஓரளவுக்கு தெரிந்தால் தான் அந்த கவிதையை உள்வாங்க முடியும்.

கேட்டிசின் வாழி தோழி யல்கற்
பொய்வ லாளன் மெய்யுற மரீஇ
வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட வேற்றெழுந்
தமளி தைவந் தனனே குவளை
வண்டுபடு மலரிற் சாஅய்த்
தமியேன் மன்ற வளியேன் யானே.


அதனால் சங்கபாடல்களில் சொல்லப்படும் மலர்கள் தாவரங்கள் ஆகியவற்றை நாம் தெரிந்து கொள்வது அந்த பாடலை உள்வாங்குவது உதவியாக இருக்கும். 'சங்க இலக்கியத் தாவரங்கள்' என்ற இந்த புத்தகம் அந்த வகையில் முக்கியமாகிறது.

https://archive.org/details/SangaIlakkiyaThavarangal

இந்த புத்தகத்தை பற்றி நாஞ்சில் நாடன் எழுதிய கட்டுரை.

Tuesday, August 18, 2015

சங்க இலக்கியத் தாவரங்கள்

கவிதையில் கூறப்படும் உவமைகளின் இயல்புகளை வைத்துதான் அந்த கவிதையின் அனுபவத்தை நாம் அடைய முடியும் என்பது நான் சமீபமாக அறிந்து கொண்டது. உதாரணத்துக்கு மேலே சித்தார்த் கொடுத்த கவிதையில் குவளை மலரையும் அதன் இயல்புகளும் ஓரளவுக்கு தெரிந்தால் தான் அந்த கவிதையை உள்வாங்க முடியும். சங்க இலக்கியம் பற்றிய ஜெவின் உரையில் இதை சொல்லியிருப்பார்.

அதனால் சங்கபாடல்களில் சொல்லப்படும் மலர்கள் தாவரங்கள் ஆகியவற்றை நாம் தெரிந்து கொள்வது அந்த பாடலை உள்வாங்குவது உதவியாக இருக்கும். 'சங்க இலக்கியத் தாவரங்கள்' என்ற இந்த புத்தகம் அந்த வகையில் முக்கியமாகிறது.

https://archive.org/details/SangaIlakkiyaThavarangal

இந்த புத்தகத்தை பற்றி நாஞ்சில் நாடன் எழுதிய கட்டுரை.

Saturday, December 20, 2014

Post modernism and plain language - An email to Noam Chomsky




Hi Dr.Chomsky,

I have been following your speeches and articles for last couple of months. I am very much impressed by your opinion and attitude and I have lot respect for you. This is my first email to you.

Recently, I am trying to understand the concepts like Structuralism, Post structuralism and Post modernism. I was interested to know your opinion about it. So I read this article. And I have two questions based on that.

http://vserver1.cscs.lsa.umich.edu/~crshalizi/chomsky-on-postmodernism.html

The article was written about 20 years back. Does your opinions have changed in these years or is it still the same that the Post modernist cult and the "theory" given by them is just truism and posturing.

Also the following lines provoked my thoughts. Because I am reading a novel written by an Indian author and many reader's response to that novel was that it is very hard to understand it. The author responded back saying this novel is re-creating "Mahabharatha" in which all the traditional Indian wisdom and Indian cutural and historical details exist. So it is hard to write it in a plain language.

Johnb made the point that "plain language is not enough when the frame of reference is not available to the listener"; correct and important. But the right reaction is not to resort to obscure and needlessly complex verbiage and posturing about non-existent "theories." Rather, it is to ask the listener to question the frame of reference that he/she is accepting, and to suggest alternatives that might be considered, all in plain language.

My question is, in which case a plain language is just not enough to communicate any sort of people. Or do you think any complex concept can be explained using plain language?

In my understanding literature is a different form of communication. Its purpose is not to impart a definite meaning but to demand the readers imagination and thoughts to understand what the text mean. It could be totally different from what the author was intended to say. In that case, is it right if the literature resort into complicated language?


Please answers my questions if possible. It was a great pleasure to email you.

Thanks,
Harish


Dr. Chomsky replied,


Noam Chomsky. La lingüistica, la informática y el activismo


My views are about the same.

Literature is a totally different matter.  There are often very good reasons to resort to modes of expression that incite the reader to think hard and independently.  Beyond that I don’t see any reason to go beyond what I said in those responses to comments.

Sunday, October 26, 2014

சில மலையாள வார்த்தைகள்

  1. பரணம் - ஆட்சி
  2. ரோமாஞ்சனம் - புல்லரிப்பு
  3. வெப்பராளம் - கோவம்,கொதிப்பு
  4. எரப்பாளி - பிச்சைகாரன்
  5. சீத்தை - மோசம்
  6. நொம்பரம் - வலி
  7. பூச்சை - பூனை
  8. விஜாரம் - நினைப்பு
  9. அன்வஷிக்கனம் - விசாரிக்கனும்
  10. நொனா - பொய்
  11. வல்லதும் - ஏதாவது
  12. காயல் - கடல்
  13. அம்பலம் - கோயில்
  14. தரவாடு - ஒரு குடும்பத்தின் பெரிய வீடு
  15. தம்புராட்டி, தம்புராண் - ராணி, ராஜா
  16. முண்டனம் - மொட்டை
  17. வட்டு, பிராந்து - பைத்தியம்
  18. பஞ்ச சாரம் - சர்க்கரை
  19. சம்பாரம் - மோர்
  20. சக்கா - பலா
  21. கச்சவடம் - தொழில்
  22. சக்கரம் - காசு
  23. வெஷப்பு - பசி
  24. களி - விளையாட்டு
  25. ஓர்மை - ஞாபகம்
  26. தெளிவு - சாட்சி
  27. தாக்கோலு - சாவி
  28. ஒக்க - எல்லாம்
  29. முறி - அரை
  30. ஒழிமுறி - விவாகரத்து
  31. பராதி - புகார்
  32. பினக்கம் - கோவம்
  33. ஆத்யம் - முதலில்
  34. அவசானம் - கடைசி
  35. சிக்ஷா - தன்டனை
  36. ஆய்ட்சா - வாரம், கிழமை
  37. திவசம்  - நாள்
  38. கொள்ளம் - வருடம்
  39. மணிக்கூறு - மணி நேரம்
  40. சல்லியம் - தொந்தரவு
  41. வைய்யான் - முடியாது, இயலாது
  42. உச்சி - மதியம்
  43. புலரி - காலை
  44. பக்ஷனம் - உணவு
  45. அணியன், அணியத்தி - தம்பி, தங்கச்சி
  46. அம்மாவன் - மாமன்
  47. சுண்டு - உதடு
  48. சேலு - அழகு
  49. மின்டு - பேசு
  50. ஆக்ரஹம் - ஆசை
  51. செராய் - பேன்ட்
  52. சம்ஷயம் - சந்தேகம்
  53. கத்து - கடிதம்
  54. விளி - அழை
  55. தெற்று - தவறு
  56. ஷெமிக்கனும்/மாப்பு தரனும் - மன்னிக்கனும்
  57. ஷீனம் - நோய்
  58. தத்தா - கிளி
  59. பஹுமானம் - மரியாதை, மதிப்பு 
  60. வாதில் - கதவு
  61. ஏமான் - எஜமான் 
  62. சம்ஸ்காரம் - கலாச்சாரம்
  63. ஆத்மஹத்தி - தற்கொலை 
  64.  ஆலோஷனா - யோசனை
  65. தள்ளு - அடி
  66. வழக்கு - சன்டை
  67. கோடதி - நீதிமன்றம்
  68. ஒரப்பு - நீச்சயம்
  69. தோக்கு - துப்பாக்கி
  70. வைகும் - தாமதமாக

Thursday, April 17, 2014

என் வீட்டு வார்த்தைகள்...

என் வீட்டில் சாதாரணமாக புழக்கத்தில் இருந்த வார்த்தைகள், வேறு பல விஷயங்களை படிக்கும் போது அந்த வார்த்தைகளின் அர்த்தமும் அதை பற்றிய ஸ்வாரஸ்யமான தகவல்களும் தெரியவந்தது. அந்த சில வார்த்தைகளை இங்கு தொகுத்து அளிக்கிறேன்.

பத்து:
பத்து என்ன ஒரு அரிய வாரத்தையா? இல்லை தான். அன்றாடம் பயன் படுத்தும் வார்த்தைதான். ஆனால் என் அம்மா 'பத்து பாத்திரம் இருக்கின்றது' என்கிறாளே, அதற்கு என்ன அர்த்தம்? 10 பாத்திரம் இருக்கிறது என்றா? பத்து என்றால் தமிழில் சோற்றுப் பருக்கை என்றொரு அர்த்தம் உண்டு. அந்த பத்தை சமைத்த, உண்ட பாத்திரம் - பத்து பாத்திரம். கன்னடத்தில் சாதத்தை பாத் என்கிறார்களே, பாத்துக்கும், பத்துக்கும் தொடர்பு இருக்குமோ? சரி, 'சொத்து பத்து' என்றால்? பத்தின் இன்னும் ஒரு அர்த்தம் - வயல். இப்படி எனக்கு தெரிந்து பத்திற்கு மூன்று அர்த்தங்கள்.


நொம்பலம்;
இது என் தந்தை அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை. அநேகமாக நாங்கள் கோவை சுற்று வட்டாரத்தில் குடியேரிய பிறகு பயன்படுத்த ஆரம்பித்த வார்த்தை என்றே நினைக்கிறேன். 'அந்த ஊருக்கு போரத்துக்குள்ள நொம்பல பட்டு போயிட்டோம்' என்பார். அது 'நொம்பலமா', 'லொம்பலமா' என சந்தேகமாகவே இருக்கும். 'நொம்பரம்'  என்றால் மலையாளத்தில் 'வலி' என்று பொருள். நொம்பலம் என்று அதே அர்த்ததில் நாஞ்சில் நாட்டு தமிழ் வழக்கில் கூறப்படுகிறது. அதன் படி, அவர் சொன்னதுக்கு 'அந்த ஊருக்கு போரத்துக்குள்ள வேதன பட்டு போயிட்டோம்' என்று பொருள். ஒரு வேளை கொங்கு பிரதேசமும் கேரள எல்லையில் இருப்பதால் அங்கு இந்த வார்த்தை பயன்பாடு இருந்திருக்கலாம். இதே போல் 'நொப்பி' என்றாள் தெலுங்கில் வலி என்று பொருள். தமிழில் 'நோவு' என்றும் சொல்வதுன்டு. ஆக, 'நொம்பலம்', 'நொப்பி', 'நோவு' இவை எல்லாம் ஏதாவது ஒரு வேர் சொல்லில் தோன்றியதாக இருக்கலாம்.

ஏனம்:
இதை என் தாத்தா பாத்திரங்களை குறிக்க பயன்படுத்துவார். அந்த 'ஏனத்த எடு' என்பார். அது என்ன ஏனம்? பாத்திரம் தெரியம், இல்லை என்றால் சம்படம், தட்டு, தூக்கு, குன்டா, அன்டா, ஏன் பான்ட்லி(வானலி?) என்ற விநோத உச்சரிப்பு கூட உள்ளது. ஆனால் ஏனம்? அவர் மட்டும் உபயோகிக்கும் வார்த்தை. ஒரு நாள் ஏதோ படிக்கும் போது அதில் இவ்வாறு வந்தது. 'அந்நகரம் இறையருளைப் பெறுவதற்காக மானுடன் மண்ணில் விரித்துவைத்த யானம் எனத் தோன்றியது.' அந்த தளத்திலேயே அந்த 'யானம்' என்ற சொல்லிற்கு அர்த்தம் 'வாயகன்ற பாத்திரம் - ஏனம்' என்று  பொருள் தரப்பட்டிருந்தது. அந்த தமிழ் வாரத்தையை இப்போது யாரும் பயன்படுத்துவதாய் தெரியவில்லை.

பரிக்கல்:
'இவன வச்சு பரிக்க முடில' - என் அம்மா சொல்லும் வாக்கியம். பரிக்க என்றால்? 'Barika' என்று உச்சரிக்கப்படும். இது ஒரு பழந்தமிழ் வார்த்தை. புறநானுற்றில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. ஆட்சி செய்தல் என்று பொருள். இன்றும் மலையாளத்தில் பயன்படுத்தப்படும்  வார்த்தை. பரன கட்சி என்றால் ஆளும் கட்சி என்று பொருள். 'என்னை நீ ஒன்னும் பரிக்கான் வேண்டா' என்றால் 'என்னை ஒன்னும் நீ கட்டுப்படுத்த வேண்டாம்' என்று பொருள். இதன் படி என் அம்மா சொன்னதற்கு 'இவன வச்சு சமாளிக்க முடில' என்று தானே அரத்தம்.

பூச்சை:
என் அப்பா 'பூச்ச கண்ணனாட்டம் மூஞ்சி' என்று சொல்வார். அவர் எந்த அர்த்ததில் பயன்படுத்தினாரோ தெரியவில்லை. ஆனால் 'பூச்சை கண்ணன்' என்றால் மலையாளத்தில் பூனை கண்ணன் என்று பொருள். 'பூச்சை குட்டி' என்றால் பூனை குட்டி என்று பொருள். பூச்சை என்பது பழந்தமிழ் சொல்லான 'பூசை' என்பதில் இருந்து மறுவிய சொல்.  பூசை என்றால் இன்று பூஜையின் தமிழ் வடிவம். பழந்தமிழில் பூசை என்றால் பூனை. அதற்காக puzzy cat எனும் ஆங்கில வார்த்தை தமிழில் இருந்து தான் போயிற்று என்றும், தமிழே உலகத்தின் முதல் மொழி என்று வாதிடும் ஆள் நானல்ல.


லெக்கு:
'அந்த லெக்குல இருக்கு பாரு' என்பார் என் தாத்தா. 'அந்த இடத்தில் இருக்கு பார்' என்று பொருள். அதென்ன லெக்கு? இடத்திற்கு ஏன் Leg என்கிறார் என்று யோசிப்பேன். பிறகொரு நாள் கூகுள் செய்து பார்த்ததில் தான் புரிந்தது. 'இலக்கு' எனும் தூய தமிழ் சொல்லே 'லெக்கு' என்று மறுவி இருக்கிறது.

காபேரி:
ஒரு முறை நானும் என் தாத்தவும் தொலைக்காட்சி பார்த்து கொண்டு இருக்கும் போது, ஒரு ஆப்பரிக்க பெண் அதில் தோன்றினாள். அதை பார்த்துவிட்டு என் தாத்தா 'காபேரியாட்டிருக்குது' என்றார். அதென்ன, காபேரி, சொல்லின் பொருள் தெரிகிறது. ஆனால் ஏன் அப்படி ஒரு பெயர். தமிழ் படி கூறினால் கருப்பி என்று தானே கூற வேண்டும்? பின்பு இலங்கையை பற்றி படிக்கும் போது ஏதேச்சையாக தெரியவந்தது. என் தாத்தா இலங்கையில் சில வருடம் அவர் இளமை காலத்தில் இருந்தவர். இலங்கையில் 'காஃபிர்' என்ற கருப்பின மக்கள் பல நூற்றான்டுக்கு முன்னிலிருந்து போர்ச்சுகீசியரால் அடிமைகளாக கொண்டு வரப்பட்டிருக்கின்றனர். இவர்கள் இலங்கையிலேயே பாரம்பரியமாக வாழந்து பல இலங்கை பழக்கவழக்கங்களை உள்ளிழுந்து கொன்டு வாழ்ந்து வருகின்றனர். 'காஃபிர்' என்ற அரபு மொழி சொல் 'இறை மறுப்பவன்' என்ற அர்த்தில்  இஸ்லாமியர்களால் உபயேகிக்கப்படும் சொல். இஸ்லாமியரல்லாத அடிமை ஆப்பிரிக்கரை அப்படி சுட்டியதால் அவர்களுக்கு அதுவே பெயராகி போனது. அது இன்று ஒரு இன வன்சொல்லாகவே கருதப்படுகிறது. ஆனாலும் இலங்கையில் வாழும் அந்த கருப்பின மக்கள் தங்களை காஃபிர் என்றே சொல்லி கொள்கின்றனர். காஃபிர் - காபேரியாக திரிவது தமிழில் வெகு இயல்பாக நடந்திருக்கும்.

இலங்கை காஃபிர்