Showing posts with label இணையம். Show all posts
Showing posts with label இணையம். Show all posts

Monday, May 19, 2014

இணையத்தில் இருந்து புத்தகத்திற்கு பின்னகர்வு

சமிப காலமாய் புத்தக வாசிப்பு என்னிடத்தில் அதிகமாகி வருகிறது. அதை தொடர்ந்து டிவி, இணையம், மற்றும் இதர பொழுதுபோக்கு அம்சங்கள் மிக குறைந்துவிட்டன. ஒரு நாளைக்கு பேஸ்புக்கில் சராசரியாக மூன்று நிமிடத்திற்கு மேல் செலவழிப்பதில்லை. இது என் வாழ்வில் பெரிய திருப்பம், ஒரு போதையில் இருந்து வெளிவந்தாற் போல் உள்ளது. சாப்பிடும் போது மட்டும் டிவி ஓடும், ஆனால் சில சமயம் விரு விருப்பான் கதை நகர்வில் சிக்கி கொன்டு நேரம் கழிவதை தவிர்க்க முடியவில்லை. ஆனால் இணையத்தை குறைவாக உபயோகிப்பது ஒரு விடுதலை உனர்வை அளிக்கிறது.

நூலகம் என்று ஒரு கட்டிடம் எல்லா ஊர்களிளுமே இருக்குமென்றே நினைக்கிறேன்.  எந்த ஊருக்கு போனாலும் அந்த கட்டிடத்தினுள் பேருக்காவது ஒரு முறையேனும் காலேடுத்து வைக்கும் நிலை அமைந்துவிடும். ஆனால் இப்போது நூலகங்களை பெரும் அளவில் உபயோகித்து வருகிறேன். அதுவும் இந்த அமேரிக்க நூலகங்கள் பெரும் அளவில் புத்தகங்களை வைத்திருக்கின்றன, தமிழ் புத்தகங்களும் ஏராளமாக உள்ளது. அனைத்து புத்தகங்களையும் நூலகங்களின் இணைய தளத்தின் மூலம் தேட, இரவல் கேட்க, இரவல் நீட்டிக்க முடிகிறது. அதைவிட மேலாக பிற நூலகங்களில் இருந்து இரவல் வாங்கும் முறை. நான் இருக்கும் மாகானமான மிஷிகன் மாகானத்தில் இருக்கும் அனைத்து நூலகங்களும் கூட்டு சேர்ந்து எந்த நூலகத்தில் இருந்தும் இரவல் வாங்கலாம் என்றும் அதற்காக அருமையான இணைய தளம் ஒன்றையும் நிறுவி இருக்கிறது.

இணையத்தில் வாசிப்பதற்கும், புத்தகத்தில் வாசிப்பதற்கும் நிறையவே வித்தியாசம் தெரிகிறது. இணையத்தில் நாம் எளிதாக தேட முடிகிறது, ஆனால் அப்படி தேடும் போது நமக்கு கிடைப்பது தேடலுக்கு உன்டான கட்டளை முறையாலே(algorithms) தீர்மானிக்க படுகிறது. எப்படி அது தீர்மானிக்கிறது என்பதை பற்றிய ஆழந்த புரிதல் எனக்கு கிடையாது. ஆனாலும் அதனை தினமும் உபயோகிப்பவன் என்பதனால் அதை ஊகிக்க முடியும். நாம் தேடுவதற்கான இணையத்தில் இடும் சொற்களை வைத்தே நமக்கு தேடல் முடிவுகளை தருகிறது. இது தேடுவதற்கு ஒரு எளிய வழி தான், ஆனால் எந்த விதமான தேடலுக்கு? சென்னையில் டிவிஎஸ் டீலர் யார் என்று தெரிந்து கொள்ள இணையம் பெரும் உதவி புரியலாம், ஆனால் அத்வைதத்தை அறிந்து கொள்ள நினைக்கும் ஒருவர் போக வேன்டிய இடம் இணையம் அல்ல புத்தகம்.
புத்தகத்தில் எழுதப்படுவது அறிஞர்களாள், நிபுனர்களாள் எழுதப்படுகிறது அன்றி இணையத்தில் இருக்கும் கத்து குட்டிகளால், பக்கத்து வீட்டு மாமாக்களால் அல்ல. புத்தகத்தில் ஒரு முறை எழுதப்பட்டு பல முறை படித்து பார்த்து சரி செய்யப்பட்டு நமக்கு கிடைக்கிறது.  இணையத்தில் பெரும்பாலும் ஒருவரால் அந்த சமயத்தில் உடனுக்கு உடனே எழுதப்பட்டு வெளியிடப்படுகிறது. புத்தகத்தில் ஒரு விஷயத்தை நாம் விரைவாக கத்துகொள்ள முடியாது படி படியாக அதை சார்ந்த அனைத்து விஷயங்களையும் கற்று கொன்டே நாம் தேடும் விஷயத்தை தெரிந்து கொளவோம். அது நல்லது, நாம் தேடும் விஷயத்துக்கு மேலும், அதன் சம்பத்தபட்ட விஷயங்களையும் தெரிந்து கொள்கிறோம். இணையம் நமக்கு தேடும் விஷயத்தை மட்டும் எடுத்து தருகிறது அப்படி எடுத்து தரும் ஒரு கட்டுரையில் கூட நாம் ஒரு நாலு வரியை படித்து விட்டு அந்த விஷயத்தை அரை குறையாக தெரிந்து கொள்ளுகிறோம்.

புத்தகத்தில் நாம் படிக்கும் போது அதில் எனக்கு தேவையான விஷயங்களையே கையில ஏந்தி படிக்குறேன். ஆனால் இணையத்தில் நான் ஒரு விஷயத்தை படிக்கிறேன் என்றால், எனக்கு தேவையான விஷயம் அங்கு பத்து வரி தான் இருக்கிறது என்றால், அதை சுற்றி பத்து வகையான விளம்பரங்கள் இருக்கும். நான் எனக்கு வேண்டிய விஷயத்தை தரவிரக்கம் செய்யும் போது அந்த விளம்பரங்களையும் சேர்த்தே தரவிறக்கம் செய்கின்றேன். எனது தரவு ஒரு வினாடியில் தரவிறங்கும் என்றால், அந்த விளம்பரங்களுடன் சேர்ந்து தரவிரக்கம் செய்யும் போது அது பத்து விநாடியாக மாறுகிறது. அதே போல் எனது தரவு 50 Kilo bytes என்றால் அந்த விளம்பரத்துடன் சேர்ந்து அது 2 Mega bytes க்கு மேலே போக கூடும்.  இது தேவையில்லாத ஒரு பளு அதை புத்தகத்தின் மூலம் எளிதாக தவிர்த்து விடலாம். இங்கே விளம்பரத்தையே ஆதயமாக கொன்டு செயல்படும் கேளிக்கை பத்திரிக்கைளை பற்றி நான் பேசவில்லை. அதே போல் இணையத்தில் விளம்பரம் இல்லாமல் எல்லாம் கிடைக்க வேண்டும் என்றும் சொல்லவில்லை. அது வியாபரம். ஆனால் இலவசம் என்ற பெயரில் இந்த விளம்பரங்கள் நம் தலையிலை ஏற்ற படுவது தான் பிரச்சனை. இந்த இணையம் என்ற ஊடகம் வந்த பின் புத்தகம் என்ற ஊடகம் பழமையாகி விட்டது. ஒவ்வொரு மனிதனும் இணையத்தையே நாடும் எண்ணம் மேலோங்கி உள்ளது.அந்த மாற்றதிற்கு நாம் குடுக்கும் விலை இந்த விளம்பரங்கள் அள்ளி அள்ளி நமக்கு அளிக்கப்படுவது.

இந்த விளம்பரங்கள் அனைத்தும் 'பல் உருக்களினால்' (Hypertext) ஆக்கப்பட்டது. ஆகவே இவ்விளம்பரங்கள் பெரும்பாலும் நாம் படிக்க சென்ற விஷயத்தில் இருந்து திசை திருப்பி விடுகிறது. விளம்பரம் மட்டும் அல்ல, படிக்கும் விஷயங்களிலேயே அதில் இருக்கும் தொடர்புகளும், பக்கவாட்டில் தெரியும் பிற விஷயங்களும் நம்மை எளிதாக திசை திருப்பிவிடுகின்றன. நாம் படிக்க சென்ற விஷயத்தை பத்து நிமிடத்தில் படித்து முடிப்போம் என்றால் இந்த திசை திருப்பிகளால் நாம் மேலும் பல நிமிடங்கள் இணையத்தில் செலவிட நேர்கிறது. புத்தகத்தில் இந்த திசை திருப்பம் நடப்பதற்கு மிக குறைவாகவே சாத்தியங்கள் உண்டு. அதிக பட்சம் ஒரு சில வார்தைதைகளுக்கு அர்த்தம் பார்ப்போம். ஆனால் புத்தகத்தில் படிக்கும் விஷயங்களை உடனுக்குடன் கூகுல் செய்து பார்த்து கொன்டிருந்தால் கதை வேறு.

மேலும் நாம் புத்தகத்தை அனுகி அறிவை வளர்த்து கொள்வதால் நாம் என்ன தேடுகிறோம் என்று எவருக்கும் தெரிய போவதில்லை ஆனால் இணையத்தில் நாம் தேடும் ஒவ்வோரு விஷயமும் பதிவு செய்யப்படுகிறது. அதை கொன்டு நாம் யார் நமக்கு என்ன தேவை என்று நமக்கு விளம்பரம் தர உபயோகிக்கப்படுகிறது. இதன் மூலம் மக்களிடம் எளிதாக நுகர்வை தூன்டி விட முடிகிறது. எளிதாகவும் விரைவாகவுமான தேவைக்கு இணையம் கை கொடுக்கும். ஆனால் அப்படி ஒரு அவசரம் இல்லையெனில், புத்தகத்தை அனுகலாம். உதாரனம், இப்போது ஒரு புது ஊருக்கு சுற்றுலா போகபோகிறோம் என்றால், அதற்கு எப்படியும் ஒரு பத்து, இருபது நாட்களுக்கு முன்னே அதற்கான ஏற்பாடுகளை தொடங்கி விடுவோம். அந்த சமயத்தில் அந்த ஊரையும், அங்கு சுற்றி பார்க்க வேண்டிய இடங்களையும் இணையத்தில் தேடுவதற்கு பதிலாக, அந்த ஊரை பற்றிய ஒரு நல்ல புத்தகத்தை நூலகத்தில் எடுத்து படிப்பது ஒரு ஆழமான புரிதலை அடைய மிகவும் உதவும்.


இதெல்லாம் போக ஒவ்வருத்தருக்கும் பல தனிபட்ட வசதிகளையும் புத்தகங்கள் தரலாம். கண் எரிச்சலை தவிர்கலாம், குறிப்பாக கம்ப்யூட்டரிலேயே நாள் முழுதும் வேலை பார்பவர்களுக்கு. நடந்து கொன்டெ வாசிப்பவர்கள், மரத்தில் ஏறி வாசிப்பவர்கள் (வாய்ப்பிருந்தால் நான் செய்ய தயங்க மாட்டேன்), தனிமையாக பூங்காவில் வாசிப்பவர்கள், கழிப்பரையில் அறிவு வளர்போருக்கு என பல சாத்தியங்கள். நவின கைபேசிகளும், மின் பலகைகளும்(tablet) இதை ஒரளவுக்கு தர முடியும் ஆனால் அதற்கு மின்னூட்டமிட்டு தயாராக இருக்க வேண்டும். ஆனால் நமக்கு வேண்டும் சமயத்தில்தான் அவை அனைந்து போகும். எதில் தொடர்ந்து படித்தாலும் கழுத்தி வலி உன்டாவதை தவிர்க்க முடியவில்லை. ஆனாலும் அறிதலில் வரும் வலி பெரும் பொருட்டல்ல.

Saturday, March 22, 2014

ஃபேஸ்புக் - அறியாத பக்கங்கள் - 2

நுகர்வு
ஃபேஸ்புக் போன்ற தளங்கள் அனைவருக்கும் ஒரு மேடை அமைத்து தருகிறது. சில நூறு பேர் பார்க்கும் மேடை, கிட்டதட்ட ஒரு சினிமா தியேட்டர் அளவுக்கு பார்வையாளர்கள். இந்த காரனத்தாலேயே ஒவ்வொருவரும் அவர்களை காட்சி பொருள்களாக கருதுகிறார்கள். அவர்கள் அங்கு பகிரும் விஷயமும் கவனிக்கபடுகிறது என்ற ப்ரக்ஞை அனைவருக்கும் இருக்கிறது, ஒரு புகைப்படம் ஃபேஸ்புக்கில் ஏற்றப்படுகிறது என்றால் அதன் மூலம் அவரது பிம்பம் வெளிகாட்டப்படுகிறது. அதன் மூலமே அந்நபரின் பொருளாதார நிலை, நவநாகரீகத்தின் அறிவு என பல வகையான தரம் பாரக்க படுகிறது. விளைவு, இதற்க்காகவே இந்த ஆடம்பர பொருட்கள் அதிக அளவில் வாங்கப்படுகிறது. பல ஆடம்பர பொருட்கள் இன்று மிக அத்யாவசியம் என்றாகிவிட்டது. வாகனங்கள், மின்னனு உபகரனங்கள் என்று எத்தனையோ விஷயங்கள் வாங்கபட்ட உடனே புகைப்படத்துடன் பகிரப்படுகிறது. சுற்றுலா புகைப்படங்கள் என பல கொன்டு வந்து கொட்டப்படுகிறது. இப்படி பல விஷயங்களில் கவர்ச்சிக்காவே இந்த ஃபேஸ்புக் பயனர்கள் நேரம் செலவிடுகிறார்கள். இப்படியே அனைவரும் செலவிட்டால் ஒரு சமுதாயத்தின் அறிவு எப்படி வளரும்? எப்படி மாற்றம் பெரும்? பெரும் வருத்ததிற்க்குரிய விஷயம் இது. இப்படி பலரும் தங்களின் பொருளாதார வளர்ச்சியையும், வல்லமையையும் பறை சாற்றவே புகைப்படங்களை காட்சியாக்குகிறார்கள். இதனால் அந்த பொருள் அத்யாவசியமில்லாதவரும் அதை வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதறக்காக பெருமுயர்ச்சியுடன் வாங்கவும் செய்கிறார்கள். இதனால் நுகர்வு ஏகமாக பெறுகிறது. நுகரப்படும் பொருள்களுக்கு மக்களே மேலும் விளம்பரம் செய்கிறார்கள். நிறுவனங்கள் இதனால் பெருமளவு லாபம் ஈட்ட முடிகிறது.

இலவச சேவை
உலகளாவிய அளவில் பல பேர், பல மணி நேரம் உபயோகிக்கும் ஃபேஸ்புக் எதற்க்காக அதன் சேவையை இலவசமாக மக்களுக்கு அளிக்கிறது? ஃபேஸ்புக் மட்டுமல்ல மின்னஞ்சல், இனைய தேடல் என பல நிறுவனங்கள் எதற்க்காக இச்சேவைகளை நமக்கு இலவசமாக அளிக்க வேண்டும்? இரு முக்கியமான காரனங்கள்.

1. விளம்பர மேடை
இப்படிப்பட்ட இனைய தளங்கள் தம்மை விளம்பரத்துக்கான ஒரு மேடையாய் உபயோகித்து கொள்கிறது. இந்த மேடையை நோக்கி நம்மை இழுப்பதற்க்காக தான் இந்த இலவச சேவை. கூகுலின் பிரதான சேவை - இனைய தேடல். கூகுல் இதர பல சேவைகளையும் தருகிறது, அதில் ஒரு இனைய தளமான யூட்யப் - மக்களுக்கு வீடியோக்களை சேமித்து பகிரும் சேவையை அளிக்கிறது. அதே போல் தான் ஃபேஸ்புக்கும், நன்பர்களை இனைத்து, அவர்கள் அங்கு இடும் புகைப்படம், வீடியோ, ஸ்டேடஸ் போன்ற பல விதமான காட்சி பொருட்களை காட்சிப்படுத்துகிறது. மக்கள் அதிக நேரம் செலவிடும் இந்த நவின ஊடகங்கள் மக்களிடமிருந்தே காட்சி பொருட்களை பெற்று காட்சிப்படுத்துகிறது, இந்த முறை இதற்கு முன்னாள் இருந்த ஊடகங்களை இருந்து வித்தியாசமானது. தொலைக்காட்சி, பத்திரிக்கை ரேடியோ போன்றவை நிகழ்ச்சிகள், செய்திகள், கட்டுரைகளை நிபுனர்களினால் தயாரித்து வெளியிடும். அந்த படைப்புகளுக்கு நடுவே விளம்பரங்கள் சேர்க்கப்படும்.ஆனால் இந்த இனைய ஊடகங்கள், மக்களால் தயாரிக்கப்பட்ட படைப்புகளை கொன்டே மக்களை ஈர்க்கிறது. அந்த  படைப்புகளுக்கிடையே விளம்பரங்களை சேர்க்கிறது. இந்த விளம்பரங்களால் அவை பெரும் வருமானம் ஈட்டுகிறது. இதில் கவனிக்க வேண்டியது படைப்புகளை உருவாக்கும் செலவு இந்த ஊடகங்களுக்கு அரவே இல்லை. ஆனால் யூட்யுப் போன்ற தளங்கள் விளம்பரங்களில் ஒரு பங்கை அந்த வீடியோக்களை உருவாக்கியவருக்கு தருகிறது. ஆனால் இதுவும் மிக சிறிய தொகையாகவே இருக்கும் என்றே நினைக்கிறேன்.

2. ஒட்டு கேட்பதும், நோட்டம் பார்ப்பதும்
இந்த இலவச சேவைகளில் பல, உதாரனத்திற்கு மின்னஞ்சல், க்ளவ்ட் ஸ்டோரேஜ் போன்ற பல சேவைகளில் நாம் நமது சுய தரவுகளையே கொன்டு சேமிக்கிறோம். இந்த தகவல்கள் அங்கு சேமித்து மட்டும் வைக்கப்படுவதில்லை. அதை டேடா மைனிங்(Data mining) என்ற முறையில் அதில் இருந்து நம்மை பற்றி பல நுண்தகவல்கள் உறிஞ்சப்படுகிறது. அதாவது நமது மின்னஞ்சல்களில் இருக்கும் வார்த்தைகளை மென்பொருளின் மூலம் ஆராய்ந்து நம்மை பற்றிய தகவல்களை வைத்து நம் ஒவ்வொருவருக்கும் எப்படியான விளம்பரங்கள் தரலாம் என்று முடிவு செய்யப்படுகிறது.  உதாரனத்திற்கு, நான் நாய் வளர்ப்பவன் என்று கண்டு பிடிக்கப்பட்டால் நாய் வளர்ப்புக்கு ஏற்றார் போல் விளம்பரங்கள் காட்டப்படும், நீங்கள் மானவர் என்று தெரிந்தால் அதற்கு ஏற்றார் போல் விளம்பரம் காட்டப்படும். இதனால் விளம்பரங்கள் இன்னும் கூர்மையைடைகின்றன. ஒவ்வருக்கும் மிகவும் சம்பந்தப்பட்ட விஷயங்களை வைத்தே விளம்பரங்கள் காட்டப்படுவதினால் குறைந்த அல்லது குறிப்பட்ட சாரார்க்கு விளம்பரங்களை அதிக முறை காட்டலாம். இதனால் அவர் அந்த பொருளை வாங்குவதின் வாய்ப்புகள் அதிகம். இப்படிப்பட்ட விளம்பரங்கள் முந்தய ஊடகங்களின் விளம்பர  அறிவை காட்டிலும் ஒரு படி மேல். அதே சமயம் எத்தனை பேருக்கு காட்டப்படுகிறதோ அதனை பொறுத்து கட்டனம் எனும் போது இந்த நிறுவனங்களுக்கு வரும் விளம்பரங்கள் அதிகமாகிறது.

எல்லாவற்றிர்க்கும் மேல் நமது தரவுகளில் இருந்து உறிஞ்சப்படும் நுண் தகவல்கள் பல நிறுவனங்களுக்கு விற்கப்படுகிறது என்றே நினைக்கிறேன். இந்த தகவல்களை இன்றைய அளவில் பவ விதமாக உபயோகிக்க வாயப்புள்ளது. ஆனால் இந்த சேவைகள் எல்லாம் இலவசமாய் கிடைப்பதால் நாமும் நம் அனைத்து விதமான தரவுகளையும் கொன்டு சென்று அதற்குள் தள்ளுகிறோம். இன்று இப்படிப்பட்ட சேவைகள் இல்லாமல் நம் வாழ்வை கற்பனை செய்து பார்க்க இயலுமா? கூகுள் போன்ற தேடல் சேவைகள் மணித குலத்தின் சாதனைகளில் ஒரு மைல்கல் என்றே நான் கருதுகிறேன். ஆனால் இந்த சேவைகளுக்கு மறைமுகமாக கட்டனம் செலுத்தி கொன்டு தான் இருக்கிறோம். கூகுள் கணக்கு வைத்திருக்கும் ஒருவரை பற்றி யாருமே அனுக முடியாத அந்தரங்கங்களை கூட கூகுள் அறிந்திருக்கும். இப்படிப்பட்ட ஆழ்ந்த நுண் தகவல்கள் வணிக நிறுவனங்களுக்கு விற்கப்பட்டால், முதலாளிகள் இந்த தகவல்களின் மூலம் மணித குலத்தையே கட்டி வைத்தால்?

ஃபேஸ்புக் நமக்களிக்கும் ஒரு சிறிய அளவு அசட்டு கேளிக்கையை தவிர பல வழிகளில் அது நம் வாழ்வில் பாதிப்பயே ஏற்படுத்துகிறது. முக்கியமாக ஃபேஸ்புக் போன்ற இனைய தளங்கள் முதலாளித்துவத்தின் கருவிகளாக உபயோகிக்கப்படுவதே. பத்தொன்பது பில்லியன் டாலர், கிட்டதட்ட 140,000 கோடி கொடுத்து 'வாட்ஸெப்' என்ற ஒரு நிறுவனத்தை ஃபேஸ்புக் வாங்குகிறது என்றால் அது இதுவரை சம்பாதித்த லாபம் எவ்வளவிருக்கிம்? இவ்வளவு விலை கொடுத்து வாங்கிய நிறுவனத்தை வைத்து ஈட்ட நினைக்கும் லாபம் எவ்வளவிருக்கும்?

வணிகம் வளரட்டும், அதன் பொருட்டு தொழில்நுட்பமும் வளரட்டும். ஆனால் அவை எல்லாம் மணித குலத்திற்க்கும், நம்மை தாங்கி நிற்க்கும் இயற்கைக்கும் நன்மை செய்ய வேண்டுமே தவிர சுரன்டி கொள்ளையடிக்க கூடாது. ஆனால் உலகம் இன்று வளப்படுத்தும் பாதையில் இல்லை. இதை மாற்ற நாம் வெகு தூரம் பின்னால் செல்ல வேண்டும். உலகத்தின் கடிவாளம் முற்றிலுமே முதலாளிகளின் கைவசம் இருக்கிறது. அறத்திற்கு மதிப்பில்லை, பணத்திற்கே. ஃபேஸ்புக்கை தியாகம் செய்வதில் நாம் இழக்க போவது ஒன்றுமே இல்லை, மாறாக நன்மை தான்.

Tuesday, March 18, 2014

ஃபேஸ்புக் - அறியாத பக்கங்கள் - 1

இன்று இனையத்தை உபயோகிப்பவர்கள் அதிகம் நேரத்தை செலவிடும் ஒரு இனையதளம் ஃபேஸ்புக். உலக அளவில் அதிகாமாக உபயோகிக்கப்படும் இனைய தளங்கள் என்ற அலெக்ஸா (alexa) பட்டியளில் அது இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது, முதலிடம் கூகுல். ஏன் அது மக்களுக்கு உகந்ததாக இருக்கிறது? ஏனெனில் அது ஒருவருக்கு தன் அனைத்து நன்பர்களுடனும் இனைந்து இருக்க வழி வகுக்கிறது. இங்கு நன்பர் என்று கூட சொல்ல முடியாது, சிலமுறை மட்டுமே பேசியவர்கள், பேசியேயிராத ஆனால் ஒரே கல்லூரியிலோ, அலுவலகத்திலோ, குழுவிலோ இருந்தவர்கள் என்று எல்லோரயும் நம்முடன் தொடர்ப்பில் இருக்க செய்கிறது. நன்பர்களுடன் அரட்டை, நக்கல், நையான்டி, சினிமா, வீடியோ, தகவல்கள், சிறிது செய்திகள் என சகல பொழுதுபோக்கு அம்சங்களையும் ஃபேஸ்புக் உள்ளடக்கியிருக்குறது. எல்லாவற்றுக்கும் மேலாக இந்த 'சேவைகள்' எல்லாம் இலவசம் என்னும் போது யார் தான் உபயோகிக்க மாட்டார்கள்.  எனக்கு ஃபேஸ்புக் வாழ்வில் உதவியும் செய்திருக்கிறது, ஊறும் செய்திருக்கிறது. ஆனால் இங்கே நான் எழுத நினைப்பது நமக்கு தெரியாமல் ஃபேஸ்புக் நம் வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்பையே.

நேர விரயம்
இது பொதுவாக எல்லோரும் அறிந்த ஒன்றே. ஒரு சராசரி ஆனுக்கோ, பென்னுக்கோ அன்றாடம் கிடைக்கும் ஓய்வு நேரம் மிக குறைவு. விடுமுறை நாட்களை வீட்டு வேலை பார்க்கவும், ஓய்வு எடுக்கவும், வெளியே சுற்றவும் ஒதுக்கிவிட்டால், ஒவ்வொரு நாளும் நமக்கு மிச்சமாகும் நேரம் சில மணி நேரங்களே. இந்த சில மணி நேரங்களை நாம் எப்படி செலவிடுகிறாம்? சில வருடங்களுக்கு முன் இந்த நேரத்தை தொலைக்காட்சி அபகரிக்கும் இன்று அதை இனயமும் பங்கு போட்டு கொள்கிறது. இந்த பொன்னான சில மணி துளிகளையும் இவ்வாறு தான் செலவிட வேண்டுமா என்பது எல்லாருமே யோசிக்க வேன்டிய ஒரு கேள்வி. அப்படியே இதில் இருந்து மீள முயல்வரையும் இந்த தளங்கள் விடாமல் அடிமை ஆக்கிவிடுகிறது. நாம் நம் நேரத்தை விலை கொடுத்து அங்கே நாம் வாங்குவது ஊர் வம்பு செய்திகளும், வெட்டி அரட்டைகளும், பீத்தல்களும், குப்பை சினிமா சார்ந்த செய்திகளையும் தான். இதை விட ஆச்சரியம் என்னவெனில் இந்த ஃபேஸ்புக் போன்ற வலை தளங்கள் நம்மை அடிமையாக வைத்திருக்கவே பல யுக்திகளை கையாள்வது. உதாரனம் சமிபத்தில் ஃபேஸ்புக்கில் பார்த்த ஒரு வசதி, முன்பெல்லாம் ஒரு வீடியோவை க்ளிக் செய்தால் மட்டும் தான் அது ஓட ஆரம்பிக்கும், ஆனால் தற்போது திரையில் நம் முன் வரும் போதே ஓட ஆரம்பிக்கிறது. இது தானகவே ஓட ஆரம்பித்தாலும் கண் முன் அசையும் படம் தெரியும் போது அதை நின்று கவனிப்பதே மணித இயல்பாகும். இப்படியே அந்த பக்கங்கள் நம்மை இன்னும் சில மணித்துளிகள் அதிகமாக செலவிட வைக்கிறது. இப்படி ஃபேஸ்புக் போன்ற தளங்கள் நம்மை கட்டி போட்டு வைப்பதற்கு பல காரனங்கள் இருக்கிறது.


அறைகுறை ஆசாமிகள்
ஃபேஸ்புக்கில் நமக்கு ஏராளமான தகவல் தெரிய வருகின்றன. அறிவியல், உலக தகவல்கள், அரசியல் என்று அது பலவகை. ஆனால் இந்த தகவல்களை உருவாக்குபவர்கள் யார் என்று நாம் பார்க்க வேண்டும். அதை சொல்பவர் அந்த துறையில் நிபுனரா, இல்லை அந்த தகவலை கூறும் அளவிற்கு முறையான தகுதி உள்ளவரா என்று. அப்படி பார்த்தால், அங்கே முக்கால் வாசி தகவல்களை எழுதுவோர்கள் அரைகுறைகளே. இப்படி பட்ட தகவல்களில் இருந்து நாம் எதையுமே முழுதாக கற்றுக் கொள்ள போவதில்லை.

மேலும் படிக்க, எழுத்தாளர் ஜெயமோகனின் கட்டுரை

வலைதள பொருக்கிகள்
பேஸ்புக்கில் சரியான வகையில் அதன் ப்ரைவசி அமைப்புகளை அமைக்கவில்லை என்றாள், யார் வேண்டுமானாலும் நம்முடன் தொடர்பு கொள்ளளாம், நமது புகைபடங்களை பார்க்கலாம். அதில் கமென்ட்கள் எழுதலாம். இது பெரும்பாலும் பெண்களை பாதிக்கிறது. புகைப்படங்களை தவறாக உபயோகிக்க வாய்ப்புகள் அதிகம். ஆபாசமான கமென்ட்கள் எழுதக்கூடும்.

போலிகள்
ஃபேஸ்புக்கில் அகௌன்ட் பதிவு செய்ய அதிகபட்சம் ஒரு மின்னஞ்சல் முகவரியும், ஒரு தொலைபேசி எண்னும் இருந்தால் போதுமானது. அதை வைத்து கொன்டு யார் வேண்டுமானாலும் எந்த பெயரிலும், எந்த பாலினமுமாக எந்த ஊரிலும் இருப்பது போல் பொய்யான அகௌன்ட் பதிவு செய்ய முடியும். இப்படி அநாமதேயமாய் இருப்பவர்கள் மிகவும் வசதியாக பல தீய காரியங்களில் ஈடுபடலாம். தன் பெயர் கெட்டுவிடும் என்ற கவலையில்லாமல் கீழ்தரமான செயல்களையும், வசைகளையும் இடலாம். ஒரு பெண்னோ, ஆணோ மற்றோரு பெண் போல போலி பெயர் மற்றும் புகைபடங்களுடன் மற்றோரு ஆணிடம் இருந்து பல விதமான விஷயங்களை அல்லது பனத்தை பேசி பேசியே பெற்றுவிடலாம். இப்படி நூதன திருட்டுகள் நடக்க வாய்ப்புகள் பல உள்ளன. இன்னொரு நபரை போல் அகௌன்ட் பதிவு செய்து அந்த நபர் புகைப்படங்களை, கமென்ட்களை போடுவது போல் போட்டு அவரின் பெயரை கெடுக்கலாம். இதெல்லாம் ஏற்கனவே நடந்தேறிய கதைகளே. இவற்றை தடுக்க சட்டங்கள் உள்ளன, இந்த போலிகளை எளிதில் கண்டு பிடித்துவிட முடியும் தான். ஆனால் அதற்கு பாதிக்கபட்டவர் நடவடிக்கை எடுக்க முனைய வேண்டும். அப்படி பாதிக்கப்பட்ட அனைவரும் அந்த நடவடிக்கைகளை எடுக்கிறார்களா என்பது கேள்வி குறி தான்.  இதை போன்ற செயல்களால் தற்கொலையும் சில நடந்தேறி இருக்கிறது.

பொறாமை பெருவெளி
ஃபேஸ்புக் நம் கண் முன் இருக்கும் உலகத்தை தான்டி இன்னும் ஒரு சூட்சமமான உலகை (virtual world) நமக்கு அளிக்கிறது. அன்றாட உலகில் நாம் வழக்கமாக பார்க்கும் நன்பர்களை, நபர்களை தவிர தினந்தோறும் ஃபேஸ்புக் மூலம் நம்முடன் இனைந்திருக்கும் இந்த சூட்சும உலக நன்பர்களையும் நபர்களையும் கான நேர்கிறது. மனித இயல்புகளான  போட்டி, பொறாமை, சக மனித கட்டாயப்படுத்தல்கள் (peer pressure) போன்றவை நம் அன்றாட உலகதினரிடம் இருந்து தோன்றுவது மட்டுமில்லாமல் அந்த சூட்சும உலகத்தில் இருந்தும் தோன்றுகிறது. முன்பெல்லாம் ஒரு சில நன்பர்களுடனும், அன்டை வீட்டாருடனும் இந்த  சிக்கல்கள் என்றால் இன்று அதே சிக்கல்கள் சில நூறு நன்பர்கள் மூலமாகவும். இந்த ஃபேஸ்புக் நன்பர்கள் பெரும்பாலும் நம்முடன் படித்தவர்களோ, அல்லது சக வேலை பார்த்தவர்கள் என்கிற போது இந்த சிக்கல்களின் அழுத்தம் இன்னும் அதிகம்.

(தொடரும்)